Saturday, July 25, 2026

46.தூக்குத் தண்டனை தேவையா?

 

தூக்குத் தண்டனை தேவையா?


உலகின் சில நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. வேறு சில நாடுகளில் அது நடைமுறையில் இல்லை. மேற்காசியாவின் சில நாடுகளில் அந்த தண்டனை குற்றவாளியை கற்களால் அடித்தே கொல்லும் அளவிற்கு மிகவும் கொடூரமாக இருக்கும். சில நாடுகளில் ஊசியின் மூலம் விஷத்தை உடலினுள் செலுத்தி கொல்லும் நடை உண்டு. இந்தியாவைப்பொறுத்தவரைஉயிர் பிரியும் வரை தூக்கிலிடுதல்என்பது உண்டு. மனித நாகரீகம் வளர வளரமரண தண்டனைஎன்பது மிகவும் கொடூரம், ஆகவே அந்த நடைமுறையை சீரமைக்க வேண்டும்என்னும் கருத்தியல் உண்டு. இந்தியாவில் பல்வேறு நிலைகளைக் கடந்த பின்னரும் உடனடியாக மரணதண்டனை நிறைவேற்றப்படுவதில்லை. கவர்னர், ஜனாதிபதி ஆகியோருக்கு கருணை மனு அனுப்பி அவர்களின் பரிசீலனைக்காக்க் காத்திருந்தபின் மரணதண்டனை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படுகிறது. குற்றவாளி என்று தீர்ப்பிற்கு ஆளான அந்த குறிப்பிட்ட நபரின் மனவலி மற்றும் உளைச்சலைப் பொறுத்தவரை அது விவரிக்க இயலாத வேதனை தரக்கூடியதாக நான் பார்க்கிறேன். அதுமட்டுமல்ல அவரால் நிகழ்த்தப்பட்ட சம்பவம் (கொலை) காலம் செல்லச்செல்ல மறக்கப்படக் கூடும். ஆனால், குடும்பத்தினரிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ’அதற்குப்பதிலாக அந்த நபர் ஜெயிலிலேயே இருந்துவிட்டுப் போகட்டுமேஎன்கிற பார்வையும் இருக்கிறது. அமெரிக்காவில் மரணதண்டனையானது சில மாகாணங்களில் இருக்கவில்ல்லை. ஒருசில காரணங்களை முன்னிட்டு சீனாவில் மரணதண்டனையானது இன்றும் உள்ளது. அது துப்பாக்கிச்சூட்டின் மூலாமாகவும் நிறைவேற்றப்படுகிறது. நிறைவேற்றப்படும் தண்டனைகளிலேயே மிகவும் கடினமான தண்டனை என்றால், அது மரணதண்டனைதான். இது சம்பந்தமாக நான் என்ன யோசிக்கிறேனென்றால், நிரைய வழக்குகள் லோயர் கோர்ட், செஷன்ஸ், ஹைகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் என பலநிலகளைக்கடந்து வந்தாலுமே, மரண தண்டனை கொடுக்கப்படுமளவிற்கு, சம்பந்தப்பட்ட நபர் குற்றமிழைக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஏழாண்டுகள் ஜெயிலுக்குள் இருக்கவேண்டிய அளவிற்கு குற்றம்  செய்திருக்கக்கூடும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஓரிடத்தில் மிகப்பெரிய தவறு ஒன்று எதிர் தரப்பினரால் நிகழ்ந்துவிட்டால், சரியான அணுகுமுறையானது குற்றவாளியின் தரப்பில் இல்லாமல் போனால், அதுவே தூக்குத்தண்டனைக்கு ஏதுவாக போய்விடுகிறது. அவர் குற்றத்திற்கான சிறைத்தண்டனை என்னவோ வெறும் 7 ஆண்டுகள்தான். ஆனால், சில நேரங்களில் சட்டத்தின் நகர்வுகள் அத்தகையதாக இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.  இதற்கு முதல் காரணம் திறன் வாய்ந்த நல்ல வழக்கறிஞரை அமர்த்தாமல்/இல்லாமல் போவது. பொதுவாக ஒரு எம்.பி.பி.எஸ் படித்து பட்டம் பெற்ற மருத்துவர்கள் அனைவருமே ஒரேமாதிரியான நிபுணத்துவம் கொண்டிருப்பதில்லை. அதேபோல் சட்டம் படித்தவர்களும் அப்படித்தான். சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், பொருளாதார வசதி அற்றவர்களுக்காக நீதிமன்றத்தில் இலவசமாக வழக்கு நடத்த இளம் வழக்கறிஞர்கள் முன்வர வேண்டும்’ என கூறியிருந்தார். ’மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் திறன்வாய்ந்த வழக்கறிஞர்கள் இதுபோன்ற வழக்குகளுக்குள் நுழைய முடியாது. அத்தகைய சூழலில் திறன்குறைவாக கொண்டிருக்கும் வழக்கறிஞர்களின் வாதத்திறமையின்மையால் ஒரு குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படும் நிலைக்குச் சென்று விடுகிறதோ?’ என்று கூறியிருப்பவர் திரு.சுனில் குமார் குப்தா அவர்கள். இவர் 35 ஆண்டுகள் திகார் ஜெயிலில் பணி புரிந்தவர். மேற்கூறப்பட்டுள்ள கருத்தினை அவர் தனது, ‘Black Warrant (ப்ளாக் வாரண்ட்)’ என்னும் நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர்,’I am against death penalty. Poor are hanged because they cannot affor good lawyers’. மகாத்மா காந்தி அவர்கள்கூட, ‘நூறு குற்றவாளிகள் கூட தப்பித்துவிடக்கூடும். ஆனால், ஒரே ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது’. நாம் இப்போது எப்படி நினைக்க வேண்டியுள்ளதென்றால், குற்றமிழைத்த பணக்காரர்கள் 10 பேர்கூட தப்பித்துக்கொள்ளட்டும். ஆனால், ஒரு ஏழைகூட சட்டத்தின் சரியான அணுகல் இல்லாமல் போவதால் தூக்குத்தண்டனைக்கு ஆலாகிவிட்டார் என்று ஆகிவிடக்கூடாது. இலவச சட்ட ஆலோசனைகள் இருந்தாலுமே, இதுபோன்ற வாக்கியஹ்தை நிலைநிறுத்த வேண்டுமென்பது எனது பார்வையாக உள்ளது.

---------------------------------------------------------------

 

 

 

45.Marriage WITHOUT Kids Is the FUTURE of Relationships

 

            Marriage WITHOUT Kids Is the FUTURE of Relationships


இந்த தம்பதியர் ஏன் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை?

 

’நாம் இருவர். நமக்கெதற்கு குழந்தைகள்?’ ஆரம்பகாலகட்டத்தில் மக்கள் தொகை கட்டுப்பாடிற்குள் இருந்தபோது, ’நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்று இருந்தது. பின்னர் ’நாம் இருவர்;நமக்கு ஒருவர்’ என வந்தது. அதன்பின்’நாம் இருவர்; நமக்கெதற்கு இன்னொருவர்’என மிகவும் கிண்டலாகவும், விளம்பரமாகவும் வெளிவந்தன. அதுவே இன்றும் பலவிதங்களில் உருமாறி உலக அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இது ஒன்றும் புதிதான விஷயமல்ல. ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளில் மக்கள்தொகை வெகுவாக குறைந்துபோனதால் இப்போது மக்கள் தொகையை கூட்டுவதற்கு குழந்தைகள் பிறப்பு விகிதத்தை? என சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்நிர்கும் சவால். தனிநபர்களுக்கு இது ஒரு பாரமாக கருதப்படுகிறது. குழந்தையைப் பெற்று அதை வளர்த்து, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் செய்து பராமரித்து, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பது வரை காரணமும் அதுதான். காரியமும் அதுதான். தனிமத வாழ்க்கைமுறையில் சுழன்றுகொண்டிருக்கும் விஷயம் இது. ஒரு நிலப்பரப்பில் சமுதாயத்தைத் தக்க வைக்க வேண்டுமானால், குழந்தைகள் அவசியமாகிறது. நம் மதத்தின் வழிபாட்டு முறை என்பது (லிங்க வழிபாடு, சக்தி வழிபாடு)  

44.சைவம் vs அசைவம்: சமூகத்தில் கலாச்சார சர்ச்சைகள் ?

 

                சைவம் vs அசைவம்: சமூகத்தில் கலாச்சார சர்ச்சைகள் ?

 


 

உலகம் முழுக்க உணவு என்றாலே அதுஉணவுஎன்பது மட்டுமே. இந்தியாவில் மட்டுமே உனவுப் பழக்கமானதுசைவம்- அசைவம்என இருபிரிவாக கொள்ளப்படுகிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகத்தான் இப்படி இரு பிரிவாக நடைமுறைக்கு வந்திருக்கிறது! பொதுவாக ஆன்மீகப்பணியை மேற்கொண்டு ஆசிரமங்களில் வாழ்ந்த முனிவர்கள் இதை மேற்கொண்டிருந்தனர். அன்றைக்கு உருவான இந்த விஷயமானது இன்றைக்கு வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சைவம் என்றாலே அதுஉடல் தூய்மை, மனத்தூய்மைஎன இறைவனுக்கு நெருக்கத்தில் கொண்டு வைத்து விட்டனர். இதனால்தான் இந்துக்களின் பெரிய கோவில்களில்அசைவ உணவுப்பழக்கம்வழக்கத்தில் இருப்பதில்லை. கிராமப்புற சிறுசிறு நாட்டார் தெய்வங்களுக்கான கோவில்களில் மட்டும்தான்கிடா வெட்டு, கோழிக்காவுஆகியன இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டும்அசைவ உணவுதயாரிக்கும் நடைமுறை. அசைவ உணவு சாப்பிட்டுவிட்டால் தாங்கள் அசுத்தமாகி விடுவதாக்க் கருதி கோவிலுக்குச்செல்லாமல் இந்துக்கள் தவிர்த்து விடுகின்றனர். இதனை கிறிஸ்தவம் உள்ளிட்ட வேறெந்த மதங்களிலும் காணமுடியாது. அசைவம் சாப்பிட்டு விட்டால் கடவுள் பக்கத்தில் போக முடியாது என்கிற கருத்தியல் கிடையாது. சைவ உணவு மட்டும் உட்கொண்டால் ஆத்ம பலம் வரும் என்றும், அசைவ உணவு சாப்பிட்டால் மிருகபலம் கூடும் என்றொரு கருத்தியல் உண்டு. இதேபோல் அசைவ உணவு சாப்பிட்டால் மூளை சரிவர வேலைசெய்யாது என்றும், சைவ உணவு சாப்பிட்டால்தான் மூளை திறம்பட வேலை செய்யும் என்றும் நீண்ட நெடுநாட்களாக எல்லோரும் கருதினர். இந்த கருத்தியலையூத இன மக்கள்தகர்த்தெறிந்தனர். புகழ்பெற்ற நோபல் பரிசினை வென்றவர்கள் பட்டியலில் 50% சதவீதத்திற்கும் மேலாக யூதமக்களே இடம் பிடித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதிதீவிர அசைவ உணவாளர்கள். மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தவர்கள் எனும் விஞ்ஞானத்தை நாம் நம்புகிறோம். உலகம் முழுக்கவே குரங்கினம் ஒரு சைவப்பட்சிணிதான். ஆனால், குரங்கிலிருந்து தோன்றிய மனித இனம் மட்டும் அசைவ உணவினை எடுத்துக்கொள்கிறது! இது எப்படி சாத்தியம்? ஒருவேளை நாமும் சைவத்திலிருந்து அசைவத்திற்கு மாறிவிட்டோமா? அப்படியானால், எந்த காலகட்ட்த்தில் மாறினோம்? அசைவ உணவினை எடுத்துக்கொள்ளத்தேவையான உடல் அமைப்புகள் நம் மானிட இனத்திடம் இல்லையென ஒரு கருத்தியலை தொடர்ந்து கூறிவருவோர் இருக்கிறார்கள். இது சம்பந்தமாக ‘வேகன்’ என்கிற  இயக்கமானது 1990- இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பசும் பாலைக்கூட அருந்தாத மிகத்தீவிரமான சைவர்கள். அவர்கள் (வேகன் இயக்கத்தவர்கள்) நவீன காலத்து சைவர்கள். அதாவது மிருகவதை கூடாது என்னும் கோட்பாடு உடையவர்கள். ஆனால், நம் நாட்டின் ’சைவம்’ என்பது ’தெய்வீகம்’ சார்ந்தது. குரங்கிலிருந்து வந்தவர்கள் நாம் என்றால், குரங்கு சைவம்! ஆனால், நாம் மட்டும் அசைவம்! இது எப்படி சாத்தியமாகும்?

-----------------------------------------------------------

46.தூக்குத் தண்டனை தேவையா?

  தூக்குத் தண்டனை தேவையா ? உலகின் சில நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது . வேறு சில நாடுகளில் அது நடைமுறையில் இல்லை . மே...