’நீதிபதிகளுக்கு மட்டுமா நடுவு நிலைமை?’
(குறளின் குரல் – 22)
‘நடுவு நிலைமை’
’நடுவுநிலைமை’ என்கிற தலைப்பைப் பார்த்தவுடன் வழக்காடு மன்றங்கள், நீதிபதிகள் சம்பந்தமான, அவர்களுக்கு மட்டுமே பொருந்திப்போகும் ஓன்றாகவும், இருதரப்பினரிடையே
பிரச்சினை எழுந்தால், இருதரப்பில் எந்தப்பக்கமும் சாயாமல் தர்மத்தின் பக்கம் நிற்பது என்றும் கூறுகிறோம். இதைக்கடந்து பல விஷயங்களை இந்த அதிகாரத்தில்
திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
முதலாவதாக,
தகுதி
எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு
ஒழுகப் பெறின். (குறள் - 111)
நண்பர்கள், பகைவர்கள் என இரண்டிலும் சாராத பொதுவானவர்கள், ஆகிய மூன்று தரப்பினடத்திலும், அறவழி சார்ந்து ஒரே மாதிரியான வினை
மற்றும் எதிர்வினை ஆற்றினால் அதுவே ‘நடுவு நிலைமை’ என்றும், அறத்தின் பயனும் அதுவே என்றும் என்கிறார் வள்ளுவர். சமுதாயத்தில் நமக்கு வேண்டிய ஒருவருக்காக
ஒரு சார்பு முடிவெடுப்பது, நியாயத்திற்குப் புறம்பாக நின்று, பகைவர்களை தொந்தரவு செய்வதற்காகவே ஏதாவது
செய்வது,
நமக்கு முன்பின் தெரியாத ஒருவரின் முகம்
சரியில்லை,
பேச்சு சரியில்லை என்பதற்காக ஏதாவது
எதிர்வினை ஆற்றுவது போன்ற காரியங்கள் யாவும் நடுவுநிலைமையிலிருந்து வெளியே போக்கும்
காரியமாகும்.
தனக்கு பகைவர் என்கிறபோதும், தன்னுடைய நோயாளியாக வந்துவிட்டால் அறவழியில்
நின்று,
அவரது உயிரைக்காப்பதே ஒரு மருத்துவரின்
தர்மம்.
மகாபாரதப்போர் தொடங்கும் முன்பு, எந்தநாளில் போரைத்தொடங்கினால் வெற்றிபெறலாம்? என அறிந்து கொள்வதற்காக பஞ்சபாண்டவர்களில்
ஒருவராகவும்,
மிகப்பெரிய ஜோதிடராகவும் விளங்கிய சகாதேவனிடம்
சென்று துரியோதனன் கேட்பான். சகாதேவனும் சம்மதித்து ஒரு நல்ல நாளை குறித்துக் கொடுப்பார். இது பாண்டவர்களில்
மற்ற
நால்வரும்,
‘துரியோதனனுக்கு
தோல்வியைத் தரக்கூடிய நாளைத்தானே குறித்துக்கொடுத்திருக்கிறாய்?’ என்று கேட்டபோது, ’தொழில் ரீதியில் என்னை நம்பி வந்து
கேட்கும்போது,
துரியோதனன் நம்
பகைவன்
என்பதால் பொய்யான ஒன்றை கூற முடியாது’ என்கிறார் சகாதேவன். ஒருவகையில் இது உச்சகட்டமான ’நடுவு நிலைமை’
ஆகும். நவீன காலமான இன்று நீதிமன்ற நடைமுறையில்
ஒரு வழக்கறிஞர் நீதிபதியாகிறார் என்றால், அவர் அதுவரை வாதாடிய ஒரு வழக்கு விசாரனைக்கு வரும்பொழுது, அவர் அந்த வழக்கில் நீதிபதியாக செயலாற்ற
முடியாது எனக் கூறலாம். இதுவும் கூட ஒரு வகை நடுவு நிலைமைதான். இத்தகைய ஒரு தருணத்தை சகாதேவன் பயன்படுத்திக்கொள்ளவில்லை
என்பது ஒரு கேள்விக்குரிய விஷயமாகும்.
இந்த அதிகாரத்தில் 2 ஆவது திருக்குறள்:
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. (குறள் - 112)
இந்தக்குறளில், ‘எவர் ஒருவர் ‘நடுவு நிலைமை’ வழுவாமல் வாழ்கிறாரோ அவருடைய செல்வமானது இடையிலே அழிந்துபோகாமல் இறுதி வரை இருக்கும்’ என்கிறார். ’நல்லது செய்தால் நல்லதே திரும்பி வரும். தவறு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்’ என்றெல்லாம் நம் இந்தியக் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கையாகும். இதுபோன்ற கனமான கருத்தினை உலகில் வேறெங்கும் சொல்லப்படவில்லை. தர்மத்தைக் காப்பதற்காக இது போன்ற கனம் மிகுந்த நம்பிக்கையை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். மக்கள் அதன் மதிப்பறிந்து அதன்வழியில் நடக்க முடியவில்லையென்றால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே, அதி மறைத்து ஒரு தவரைச் செயவர். இதுதான் இன்னும் நிலைமையை மோசமாக்கும் என்பதையும் பார்க்கிறோம். இதனை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க இயலாதுதான். ஆனால், ‘நடுவுநிலைமை’ தவறிச் சேர்க்கும் பொருட்செல்வம் இறுதிவரை வராது என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
இந்த
அதிகாரத்தில்
3 ஆவது திருக்குறள்:
நன்றே தரினும் நடுவிகந்தாம்
ஆக்கத்தை
அன்றே யொழிய விடல் (குறள் 113)
இந்தக்குறளில் ‘நடுவு நிலைமை’ தவறியதால் கிட்டும் பொருட்செல்வமானது
நன்மையையே தரும் என்றாலும், அது தேவையில்லை. அதை விட்டொழியுங்கள்’ என்கிறார் வள்ளுவர்.
இதே அதிகாரத்தில் மிகவும் பிரபலமான குறள் நான்காவது குறளாக வருகிறது.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும். (குறள் - 114)
‘அவர் நடுவு நிலைமையான நபர்தான். ஆனால், ஒரு சார்பு நிலையிலையிலே முடிவெடுப்பார்’
என்று கருதப்படக்கூடிய
ஒருவரை எப்படிக் குணடு உணர்வது? அது அவரவர் எச்சத்தால்… அதாவது அவருடைய வாழ்க்கையின் மிச்சத்தால் எனலாம். இந்த மிச்சமானது இருவகையாகும். முதலாவதாக அப்படிப்பட நபரின் வாரிசுகள். அவர்களுடைய மரபுவழியை எப்படி கொண்டு செல்கின்றனர் என்பது புறம். இது ஒரு வகை எச்சம். இரண்டாவது வகையானது ‘புகழ்’. அதாவது ஒருவர் வாழும்போது புகழ் போன்றவற்றைவிட,
அவர் இறந்தபின்னர் அவருடைய வாரிசுகள் தங்கள் மரபு வழியை வெளிப்படுத்தும்
செயல்களும், அவர் மறைவிற்குப்பின்னர் உலகில் அவரைப்பற்றி எப்படி நல்ல விதமாக புகழ்கிறதோ.. இவையிரண்டும் மட்டுமே ஒரு மனிதனின் எச்சங்களாகும்.
இதிலேயே ஒருவரின் நடுவுநிலைமையைப்பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம். என்று வள்ளுவர் கூறுகிறார்.
அடுத்து 5 ஆவது குறளாக,
கேடும் பெருக்கமும் இல்லல்ல
நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. (குறள்- 115)
மேற்கூறப்பட்டுள்ள குறள் இடம் பெறுகிறது.
’கேடும் பெருக்கமும்’ நல்லவையும், கெட்டவையும் அதாவது தீவினைகளால் கெட்டவையும், நல்வினைகளால் நல்லவையும் இவையெல்லாம் ஏற்கனவே உள்ளவைதான். இதை நாம் மாற்றிவிட முடியாது. இவர்றை தெரிந்து கொண்டோ, அல்லது தெரியாவிட்டாலோ நாம் எப்பொழுதும் ‘நடுவு நிலைமை’ தவாறமல் இருக்க வேண்டும்’ என்று கூறுவதன் மூலம் இதே அதிகாரத்தின் முந்தைய நான்கு குறட்பாக்களின் திசையில் அல்லாமல் வேறு ஒரு திசையில் இந்தகுறளைச் செலுத்துகிறார்.
6 –ஆவது குறளாக,
கெடுவல்யான் என்பது அறிகதன்
நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். (குறள் - 116)
என்னும் குறள் வருகிறது. இத்தனைக் குறட்பாக்களிலும் சொல்லப்பட்ட தவறுகின்ற நடுவு நிலைமையோ அல்லது சிந்தனையோ சொல்லப்படவில்லை.
நடுவு நிலைமை தவறலாமா? என்கிற சிந்தனை வந்துவிட்டாலே,
எதிர்காலத்தில் பிரச்சினை உருவாக நிச்சயம் வாய்ப்புள்ளது என்பதை நம் சிந்தனைக்கு எச்சரிக்கை விடுக்கிறார் வள்ளுவர்.
அதிகாரம் 12- லேயே,
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. (குறள்- 117) என்னும் குறள் ஏழாவது குறளாக வருகிறது. இதுவரை ‘நட்டுவு நிலைமை’ தவறுவதால் ஏற்படும் பொருட்செல்வத்தின்
பலன்கள் எவை? பிரச்சினைகள் ஆகியவற்றைக் கூறிவிட்டு, இப்போது ஒருவேளை ஒருவர் நடுவு நிலைமை தவறாமல், ஒரு பிரச்சினையில் எந்த சார்பும் எடுக்காமல், நியாயமாக பணி செய்கிரார் என்று வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டவர் தன் நிலைப்பாட்டினாலேயே ஏழையாகிவிட்டால்,
அதுகூட ஒரு பெருஞ்செல்வம்தான் என்கிறார். இதன் மூலம், பொருட்செல்வத்தைவிட, பாவ,புண்ணிய கணக்கிற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
8- ஆவது குறள்;
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல்
அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (குறள்- 118)
’தராசு’ என்பது எவ்வாறு இருபுறத்தின் எடை ஏற்ற இறக்கத்தை சமன் செய்ய ஒரு குறியீட்டின் மூலம் காட்டுகிறதோ… அதுபோன்று நேர்மையோடு செயலாற்ற வேண்டும். இருபக்கமும் சமமாக இருக்கும்பட்சத்தில்
அந்தத் தராசின் முள்ளானது நடுவில்தான் நின்றாக வேண்டும். எந்தப்பக்கம் எடை அதிகமோ அந்தப்பக்கமாக தன் குறியீட்டைக் காட்ட வேண்டும். ஏதாவது ஒருபுறத்தில் அந்த வழக்கின் நியாய சார்பு அதிகம் இருப்பின் அந்தப்பக்கமே குறியீடு காட்டப்பட வேண்டும். தராசு எப்போது தன் தன்மையை மாற்றிக் கொள்வதில்லை. அதுபோல் நாமும் நடுவு நிலைமை தவறாமல் வாழ வேண்டும். பொதுவாக தராசினைப் பயன்படுத்தும் வணிகர்கள் சிலர் தராசில் தவறுகளைச் செய்யக்கூடும். ஆனால், அதன் முள்ளில் தவறு செய்வதில்லை. செய்யவும் முடியாது. தராசின் இரு தட்டுகளுக்கும் சார்பில்லாமல்,
தராசின் முள்போன்று நேர்மையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வள்ளுவர் இக்குறளின் மூலம் வழிகாட்டுகிறார்.
இதுவரை செயல்களில், எண்ண ஓட்டங்களில் நடுவு நிலைமை என்று வலியுறுத்தப்பட்டது. சரி.. எண்ன ஓட்ட்த்தில் நடுவு நிலைமை என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
இதற்கான பதிலை,
சொற்கோட்டம் இல்லது செப்பம்
ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின். (குறள்- 119)
என்று வரும் 9 ஆவது குறள் விளக்கம் தருகிறது.
நான் அவ்வப்போது கலாச்சாரம், பாரம்பரியம் போன்ற இன்னபிற விஷயங்களை சமூக வலைதளங்களில் பேசிவருகிறேன்.
அதைக்கண்டும், கேட்டும் பலர் தங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக பதிவு செய்வார்கள். அவற்றில், நான் ஏதொ ஒரு குறிப்பிட்ட சாதிக்காகவும்,
ஒரு கட்சிக்காகவும் சார்பு நிலை எடுத்துப் பேசுகிறார் என்றெல்லாம் என்னன்னவோ பதிவிடுவர். நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. சாதிக்காகவோ, மதத்திற்காகவோ பேசாமல்
என் கருத்தின்படி எது நியாயமோ அதையே நான் பேசுகிறேன். என் தராசு நியாயமாக இருப்பதால் நான் அவ்வாறு பேசுகிறேன். என் உள்ளம் கோர்வையாக இருக்கும்பட்சத்தில் எனது சொற்களும் கோர்வையாக வரும். யாருக்காகவும் எதற்காகவும் சார்பு நிலை எடுக்காமல் நான் பேசும்பட்சத்தில்,
என் குரலில் தெளிவும், வார்த்தைகளில் கோர்வையும் நிச்சயமாக இருக்கும். எத்தகைய நிலைப்பாடு கொண்டுள்ளேன் என்பதை வார்த்தைகளில் தெரிந்து கொள்ள முடியும். ஒருவேளை உலகில் எல்லா மனிதர்களுமே நடுவு நிலைமையோடு’ இருந்துவிட்டால்,
ஒரு பிரச்சியும் எழாது. உலகின் 90% பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுவிடும். இரு தரப்பிற்கும் ஏதேனும் வித்தியாசங்கள் இருந்தால் அந்த வித்தியாசங்களை அனுமானித்து கணிப்பவர்கள் சரியாக கணித்து விட்டால், அது ஒரு வரையறைக்குள் இருக்கும். அதனைத் தாண்டாது.
’நடுவு நிலைமை’ என்பது வெறுமனே நீதிபதிகளுக்கு என்று
மட்டும் சொல்லப்பட்டது அல்ல. எல்லா மனிதர்களுமே அவரவர் வாழ்க்கையில்
ஒரு விஷயத்தை நியாயமாகப் பேசுவது, நியாயமாக நடந்துகொள்வது
என்றில்லாமல்,
யாருக்காகவோ சார்பு நிலையில் பேசுவது, அவர்கள் தரப்பில்
நியாயம் இல்லாமலிருந்தாலும் எமோஷனலாக ஆதரவு தெரிவித்துப் பேசுவது
ஆகியன எல்லாம் அறத்திற்கு எதிரானது மட்டுமின்றி ‘நடுவு நிலைமை’ தவறிய
நிலைதான் என்பதையே திருவள்ளுவர் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.
அதிகாரத்தின் இறுதிக்குறளில் வாணிபம் செய்பவர்களுக்கானாதாக செய்தியைக்
கூறுகிறார்.
’வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.’
(குறள் - 120)
இதன் பொருள் என்ன?
இன்னொருவரின் பொருளை நாம் வியாபாரம் செய்கிறோம் என்றால், அதை நம்
இஷ்டத்திற்குச் செய்வது, அதை சேதபடுத்துவது எனச் செய்தால் நிச்சயமாக
அது ‘நடுவு நிலைமை’ இல்லை என்றும், நம் சொந்தப்பொருளை எப்படி
அக்கறையோடும்,
பாதுகாப்போடும் விற்பனை செய்வோமோ அதேபோல் மற்றாரின்
பொருளையும் விற்பனை செய்ய வேண்டும். அதுவே ‘நடுவு நிலைமை’
ஆகும். அதனால் ஈட்டப்படும் செல்வமானதி இறுதிவரை நிலைத்திருக்கும். அவ்வாறு இல்லையெனில் பாதியிலேயே கரைந்துபோகும். ’அடுத்தவர் பொருள்தானே’ என அலட்சியமாக எண்ணினாலே அதற்கான ட்தாக்கம் இருக்கும். அவ்வாறு எண்ணினாலே நம் வார்த்தைகளின் மூலம் பிறருக்குத் தெரிந்து விடும். ‘உங்கள் பொருளென்றால் இப்படிப்பேசுவீர்களா?’ என்கிற கேள்வி வந்துவிடும். ஆக, எல்லா தரப்பினரும் அவர்களிம் அனைத்து செயல்பாடுகளிலும்
நியாயத்தின் பக்கம், நடுவு நிலைமை தவறாக வாழவேண்டும் என்பதையே இக்குறளின் மூலமும், ஒட்டுமொத்த அதிகாரத்தின் மூலமும் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
------------------