Monday, August 24, 2026

76.முதுகுளத்தூர் பிரச்சனையில் நடந்தது என்ன? நாடாளுமன்றத்தில் தேவரின் பேச்சு!

 

முதுகுளத்தூர் பிரச்சனையில் நடந்தது என்ன?

நாடாளுமன்றத்தில் தேவரின் பேச்சு!


            பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பார்வார்டு கட்சியில் அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு அருப்புக்கோட்டை சட்டமன்றத்தொகுதியிலிருந்து தேவாங்கு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் மட்டுமின்றி தாழ்த்தப்பட்ட இனத்தின் சார்பில் மூன்று;நான்கு பேர் இருந்திருக்கிறார்கள். உண்மையில்முதுகுளத்தூர் கலவரம்சம்பந்தமான வரலாற்றை மீண்டும் அனைவரும் படித்தறிய வேண்டிய ஒன்றாகும். அந்தக்கலவர்ரம் சம்பந்தமான மாவட்ட ஆட்சியர்அமைதிக்கூட்டம்ஒன்றை நடத்தியபோது,  தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பில், அவர்களால் எங்கள் கட்சியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களையும் கையெழுத்து பெறுங்கள். அவர்கள் போடாமால் மற்றவர்கள் எப்படி போட முடியும்? அவர் எல்லோரையும் அரவணைத்துதான் கட்சியினை நடத்தியிருக்கிறார். தன் சாதிக்காக என எதையும் அவர் பிரத்யேகமாகச் செய்யவில்லை. ஆனால், அப்படிப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைத்தான் பின்னாளில் குறிப்பிட்ட சாதிக்கட்சித் தலைவராக பிற்பாடு அடையாளப்படுத்தி விட்டனர். அவர் தனது  உயிர்மூச்சுக் கொள்கையானதேசியம், தெய்வீகம்என்கிற நிலைப்பாட்டிலிருந்து சற்றும் கீழிறங்கவில்லை. அவரை தெய்வீகத்தின் குறியீடாக மக்கள் பார்க்கத் தொடங்கினர். ‘ஒரு மாபெரும் தலைவர் வாழுங்காலத்தில் தாங்களும் வாழ்ந்து வருகிறோம்என்கிற  பெருமிதத்துடன் அவரைப் பார்த்தார்கள். தமிழகத்தில் தேவர் அவர்களைப் பற்றி புகழும் பாடல்கள் எண்ணற்றவை. ஒரு திரைப்படத்தில்கண்டா வரச்சொல்லுங்க..’என்ற பாடல் இடம் பிரபலமானது. உண்மையில் அந்தப்பாடல் அக்காலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மக்கள் அதிகமாக பாடிய பாடல்தான் அதூ! தேவர் அவர்களைப்பற்றி ஏற்கனவே வெளிவந்து பிரபலமானதே. முதல்வர்களாக இருந்தவர்களுக்கே கூட இந்தளவிற்கு பாடல்கள் புனையப்பட்டதில்லை.

அண்ணல் காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு ஏன் மிகப்பெரிய பகழ் கிட்டியது?’ என்று எப்படித் தெரியாதோ.. அதேபோல்தான் தேவர் அவர்களுக்குக் கிட்டிய புகழும்.  மக்கள் மனதில் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடுதான் என்று சொல்லலாம்.  ஆனால், அப்படிப்பட்ட மாபெரும் தலைவர்களை ஒரு ஜாதிக்கான தலைவராக மட்டும் மாற்றிக்காட்டும் போக்கு தமிழகத்தில் அதிகம். என்னுடைய அனுமானத்தில் 1970 க்கும் முன்னால் வாழ்ந்த தலைவர்கள், அதற்குப்பின் வந்த தலைவர்கள் என இரண்டுவகையாகப் பிரிக்கலாம். 1970-க்கும் முன்பிருந்த தலைவர்களை அப்பழுக்கற்ற தலைவர்களாக நான் பார்க்கிறேன். அவர்கள் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள். பதவி, அதிகாரம் எல்லாம் வருமா? என அவர்கள் எதிர் பார்த்ததில்லை. அவர்கள் புனித ஆன்மாவாகவே வாழ்ந்திருந்தனர். அந்தப் புனித ஆன்மாக்கள் போல் மீண்டும் நமக்கு கிடைக்கவேயில்லை.    

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் மீது அளவற்ற மதிப்பு கொண்டவர் முத்துராமலிங்கத்தேவர். நேதாஜி அவர்களின் மறைவுச்செய்திக்குப்பின்புளிச்சிகுளம்எஸ்டேட்டிற்கு தங்கிய தேவர் அவர்கள் தொடர்ந்து நான்காண்டுகளை தனது ஆன்மீக சாதகங்களை மட்டுமே செய்வதில் செலவிட்டார். இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகுதான் அவர் அந்த எஸ்டேட்டிலிருந்து வெளியே வந்தார்!   

 காமராஜருக்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கும் ஒரு இடையில் மோதல் போக்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது பற்றிய புரிதல் நமக்கு வேண்டும். நேதாஜி அவர்களின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணகர்த்தா ஜவஹர்லால் நேருதான் என்கிற எண்ணம் கொண்டவர். நேதாஜி தொடங்கியபார்வார்டு பிளாக் கட்சியைச்சேர்ந்தவர் தேவர் அவர்கள். அவருக்கு நேருவின் காங்கிரஸ் பேரியக்கத்தில் அசைக்க முடியாத நிலையில் இருந்தவர் காமரஜர் அவர்கள். ஆரம்ப காலத்தில் தேவரும் காமராஜரும் காங்கிரஸிலேயே ஒன்றாக தொண்டாற்றியவர்கள்தான். இருவரும் அரசியலில் ஒன்றாக வளர்ந்தவர்கள்தான். கட்சியில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு பலப்படுத்துவதில் காமராஜர் வல்லவர். அவர் அறிமுகப்படுத்தியகே-பிளான்என்பதூ சாதாரண விஷயமில்லை. இனி வருங்காலத்தில் கூட இன்னொரு தமிழனால் அதை செய்துகாட்ட முடியாது. உண்மையில் அவர்கிங் மேக்கர்’.  இந்நிலையில் தமிழகத்திற்கு முதல்வராகும் வாய்ப்பு காமராஜருக்கு வருகிறது. காமராஜர்தேவர் சந்திப்பானது சென்னை தி.நகர் வீட்டில் நடந்திருக்கிறது. அப்போது நிர்வாக ரீதியிலான கண்ணோட்டத்தில் பார்த்த தேவர் அவர்கள், காமராஜரிடம், ‘அரசியல் தலைவராக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். கட்சியின் தலைவராக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எம்எல்ஏவாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். நம் மனதில் பட்டதைப் பேசிவிட்டுப்போகலாம். ஆனால், நிர்வாகம் செய்வதற்கு முறையான படிப்பு படித்திருக்க வேண்டும். அதனால் வேண்டாம்என கூறியதாக சொல்லப்படுவதுண்டு. முத்துராமலிங்கத்தேவர் அவர்களும் அதற்கு முந்தைய காலத்தில் ஒரு படிக்காத மேதை யாரையாவது பார்த்திருந்த அனுபவம் இருந்திருந்தால், ஒருவேளை அவரும் நம்பியிருக்கலாம்.  இந்த இடத்தில்தான் அவர்கள் இருவர்ருக்குமிடையே சிறிய இடைவெளி வந்திருக்கலாம். அடுத்து காமராஜர் முதல்வராக இருந்தபோது தேவர் அவர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவமும் சில திருப்பங்களை உருவாக்கியிருக்கலாம். இவற்றில் எது சரி? எது தவறு? ஏன இன்றைக்கு நாம் கண்டிபிடிப்பது மிகவும் கடினம். ஆனால், நான் அறிந்த வகையில் காமராஜர் – தேவர் அவர்களுக்கிடையே நட்புறவில் எவ்வீத மார்றமூம் இருந்திருக்கவில்லை. அவர்களுக்கிடையே மனஸ்தாபம், சண்டை என வந்திருந்தாலும் கூட அது நாட்டுக்காக, நாட்டுமக்களின் நலனுக்காகத்தான் இருந்திருக்கும். நிச்சயமா அவங்கவங்க வீட்டைக்காப்பாத்திக்கிறதுக்கில்ல.  பின்னாளில் காமராஜரின் ஆட்சித்திறனைப்பார்த்து, ’என்னய்யா படிப்பு? இத்தனை ஸ்கூல் கட்டிட்டார். இத்தனை அணைகள் கட்டிட்டார். இவ்வளவு பெரிய தொழிற்சாலைகள் அமைச்சிட்டார்’ என்றெல்லாம் பெருமையாக்க் கருதியிருப்பார். அடுத்து எதிர்கொண்ட தேர்தலில் எந்தப்பிரச்சினையுமில்லை. ஆனால், எதிரியாக விளங்கிய காங்கிரஸ் அரசை நீக்க வேண்டும் என்பதுதான் தேவர் அவர்களின் இலக்கு.  தேவர் அவர்கள் புதுக்கோட்டை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, பாராளுமன்றத்தில் 2 ½ மணி நேரம் உரையாற்றிருக்கிறார்.  அவருடைய இறுதியான நீண்ட உரை அதுவாகத்தானிருக்கும். அதனை மிக உன்னிப்பாக நான் கேட்டிருக்கிறேன். தேவர் அவர்கள் அப்படிப்பேசும்போது முதலில் ரஷ்யா, ஜெர்மனி ஆகியவற்றின் செயல்பாடுகள் என சர்வதேசப்பிரச்சினைகள் பற்றியே பெரும்பாலும் பேசி, தொடர்ந்து மெல்ல இந்தியாவைப்பற்றிப் பேசுகிறார். ’’இப்படி நாட்டுக்காக, நாடு நன்றாக விளங்க உழைக்கிறோம். நாட்டை வளர்க்க வேண்டுமென்கிறோம். ஆனால், எங்கள் மீதுதான் கொலைவழக்கு போட்டு ஆட்சி நடத்துகிறார்.  கடைசி இரண்டுநிமிடங்களில்தான் தமிழ்நாட்டைப்பற்றிப் பேசுகிறார். அப்போதுகூட அவர் காமராஜர் பெயரைக்குறிப்பிடவில்லை. காமராஜர் மீது சந்தேகம் இருந்திருந்தால் அவருடைய பெயரைக்குறிப்பிட்டு பேசியிருப்பார். அவர் பயந்துபோகக் கூடியவரில்லை. அவர்களுக்கிடையே அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் இருந்திருக்கலாம். ஆனால், சுயநலம் இருக்கவில்லை. ஆக, 1970 களுக்கு முன்னால் வாழ்ந்த தலைவர்களைப்பற்றி அரசியலுக்காக படிக்க வேண்டுமே தவிர, இன்றைக்கு நிலவும் அரசியல் சூழ்நிலைகளைக் கொண்டு ஒப்பிடக்கூடாது. அவர்களெல்லாம் ஒப்பற்ற மாணிக்கங்கள். காமராஜர் இருந்த காங்கிரஸூம், அவர் உருவாக்கிய ஸ்தாபன காங்கிரஸும் பலவீனமான நிலையில் உள்ளன.  தேவர் அவர்களின் கட்சியும் பலவீனமாக உள்ளது. ஆனால், தேவரும், காமராஜரும் மக்களின் இதய சிம்மாசனத்தில் இன்றைக்கும்கூட அதிக பலத்துடன் அமர்ந்திருக்கிறார்கள்!

 

----------------------------------------------------------------

75.The Ultimate Battle Parents Vs Kids Friends

 

The Ultimate Battle Parents Vs Kids Friends


            குழந்தைகளுக்கு 7 அல்லது 8 வயது வருவது முதல் அவர்களில் 20 அல்லது 22 வயது வரையிலும் அவர்களின் முக்கியமான பிரச்சினை ‘ஃப்ரெண்ட்ஷிப் (நட்பு)’ என்பதுதான். ஆன் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ எவராயினும் அவர்களின் 7 வயது பருவத்தில் நட்பை நம்பி வேறொருவர் வீட்டிற்குச் செல்லமாட்டார்கள். தங்கள் பெற்றோர்களைத் தாண்டி வேறெவரையும் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அதன்பின் பள்ளிக்குச் செல்லும்போது மெல்ல மெல்ல அவர்களின் நட்பு வட்டம் உருவாகும். இப்படி உருவாகும் நேரத்தில் அனைத்து பெற்றோர்களுமே உஷாராக ஆரம்பிக்கிறார்கள். தங்கள் குழந்தை யாரிடமெல்லாம் பேசவேண்டும், யாரையெல்லாம் விலக்கிவைக்க வேண்டுமென்று மற்ற குழந்தைகளைப் பற்றி விமர்சிக்கும் வகுப்பெடுக்கத்தொடங்கி விடுகிறார்கள். இங்குதான் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் கருத்தியல் மோதல் தொடங்கி விடுகிறது. ஒரு குழந்தைக்கு அதன் நட்பு வட்டத்தில் உள்ள யாரையெல்லாம் பிடிக்கிறதோ அவர்கள் எரையும் அந்தக்குழந்தையின் பெற்றோருக்கு பிடிப்பதில்லை. அதேபோல் அந்த பெற்றோருக்குப் பிடித்தமான குழந்தைகளை அந்தக் குழந்தைக்குப் பிடிப்பதில்லை. சரி.. பெற்றோருக்கு ஏன் இத்தகைய மனோபாவம் இருக்கிறது என்று பார்த்தோமானால், அவர்களின் சுமார் 30 வயதிற்குள் அவர்கள் தங்களின் ’நண்பர்-நண்பி’ என ஆத்மார்த்தமாக நம்பி பழகிய பலராலும் சில கசப்பான அனுபவங்கள், அந்த நட்பு வட்டம் இழைத்த நம்பிக்கை துரோகங்கள் ஆகியவற்றால் அனுபவித்த வேதனைகள் அனைத்தும் அவர்களை அந்த நிலைக்குத் தள்ளிவிடுகின்றன. இதனால் பெற்றோருக்கு ஒருவிதமான அச்சம் ஏற்படுகிறது. இதனாலேயே தன் நண்பர்-நண்பிகளால் தாங்கள் பட்ட துன்பங்கள், நம்பிக்கை துரோகங்கள், ஆகியன போல் தங்கள் குழந்தைகளும் அனுபவிக்கக்கூடாது என மனம் பதைக்கிறார்கள். ஒருவேளை தங்கள் குழந்தைகள் ஏதாவது குற்றங்குறைகளுடன் காணப்பட்டால் போதும், உடனே தங்கள் குழந்தைகளின் நட்புவட்டத்தை அலசிப்பார்த்து, பழியை யாராவது ஒரு குழந்தையின் மேல் சுமத்துவார்கள்!

குழந்தைகளின் உலகமோ தனிஉலகம்! அவர்களின் பத்துவயது வாக்கில் அவர்களுடைய சிந்தனை, மனம் ஆகியன புதியதான சூழலில் ஒரு வடிவமெடுக்கத் தொடங்குகிறது. அவர்களின் வயதொத்தக் குழந்தைகளை உள்ளடக்கிய குழு தேவையாகிறது. தாய்ப்பாசம், தந்தை பாசம், சகோதர, சகோதரி பாசம் போன்று தன் வயதொத்த பள்ளிக்குழந்தைகளிடத்தில் நட்பின் அடிப்படையில் இன்னொருவகை பாசத்தைத் தேடத் தொடங்குகின்றனர். அவ்வாறு அமையும்போது அதனை அவர்கள் வெகுவாக நம்புகின்றனர். அப்படி நம்பினால்தான் ஒரு குழுவாக ஊருவாகி, அவர்களால் அதனை அனுபவிக்க முடியும்.  கல்லூரிப் படிப்பு வரையிலும் இந்த பந்தம் தொடரத்தான் செய்யும். மது அருந்தத் தொடங்குதல், புகைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான பஞ்சாயத்துகளுக்கு ஆட்பட வைக்கும் பிரச்சினைகளும் அங்கேதான் தொடங்குகின்றன. அவரவர் மனதிற்கு ஏற்றபடிதான் நட்பு வட்டமும் அமையும். இன்னன்னாருடன் ’பேசிப்பழகு’ என பெற்றோர் கூறினாலும், தன் மனதிற்கு ஒவ்வாத ஒருவருடன் பழக பிள்ளைகளின் மனம் ஒப்புக் கொள்வதில்லை. ஆக, இந்த வகையான போராட்டமான, சிக்கலான  நிலையை’ பெற்றோர்- குழந்தைகள்’ ஆகிய இருதரப்பினரும் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.  குழந்தைகளுக்கு பிடித்தமான நட்பு வட்டம் அவசியம்தான். அதீல் உள்ள ’மிகவும் தீயவர்’ என கருதப்படும் நிலையில் இருக்கும் நபர்கள் (மது, புகை மற்றும் இன்னபிற பழக்கங்களால் தங்கள் குழந்தையைக் கெடுத்துவிடக்கூடிய பழக்கமுள்ளவர்) யாரென்று தனியே அடையாளப்படுத்த முடிந்தால், அந்த நபரைப்பற்றி நாசூக்காக எச்சரிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், உங்கள் குழந்தைகள் தனிமைக்கு ஆளாகக்கூடும். மேலும், பெற்றோரின் 30 வயதில் பெற்ற மோசமான அனுபவங்கள் எல்லாம் குழந்தையின் சிறு வயதிலேயே தாக்கிவிடும். அப்படி ஆளாகும்பட்சத்தில் உணர்வின் உந்துதலால் மோசமான நபர்களை அந்தக் குழந்தைகள் நம்பிவிடக்கூடும். ஆகவே குழந்தைகள் சுயமாக, எச்சரிக்கை உணர்வுடன் வெளியுலகத்தை அணுக வேண்டும். அதற்காக அவர்கள் தங்களைத் தாங்களே தயாரிப்பு செய்துகொள்ள வேண்டும். இதேபோல் குழந்தைகளும் தங்களின் பெற்றோர் விடுக்கும் எச்சரிக்கையை, அறிவுரையை காதில் வாங்கிக்கொண்டு சுயமாக யோசிக்க வேண்டும். என்னுடைய பாலகப் பருவத்தின்போது, சொந்த கிராமத்தில் 10-15 ஆண்கள், 10 பெண்கள் என ஒரு பெரிய வட்டமே இருந்தது. அவர்கள் அனைவருமே எனக்கு உறவுக்காரர்கள்தான். அப்படி இருந்தும்கூட ஒரு சில ’குறைகள்’ இருக்கத்தான் செய்தன. அவர்கள் எல்லோரும் இப்போது 45 வயதில் இருப்பவர்கள். அதிலும், அந்த ஊரிலேயே வசித்துக்கொண்டிருப்பவர்களே. இருந்தும் இன்னமும் கூட ’அவன் நல்லவன்; இவன் கெட்டவன்’ என்கிற ரீதியில்தான் தங்களுக்குள் குறை சொல்லிக்கொள்கிறார்கள்!  இப்படியெல்லாம் நாட்டில் நிலைமை இருக்கிறபோது, நகர்புறத்தில் வெறும் நான்காண்டுகள் மட்டுமே பள்ளியில் ஒன்றாகப் படித்து, ஒருவர் நல்லவனாகவும், இன்னொருவர் கெட்டவனாகவும் முடியும்!? அதிலும் திடீரென ஒரு மாணவர் வேறுபள்ளிக்கு அல்லது வேறு ஊருக்குச் செல்ல நேரிடும். அதேபோல் வேறு புதிய மாணவர் இந்தப்பள்ளிக்கு வந்து புதிதாக சேரக்கூடும். ஆனால், பெற்றோரின் பார்வையில் தங்கள் குழந்தையைத் தவிர மற்ற எல்லாக்குழந்தைகளுமே, எப்போதுமே கெட்டவர்களாகத்தான் தெரிகிறார்கள். ஒரு குழுவாக, உணர்வோடு பார்க்கும்போது தன் நண்பர்கள் எல்லோருமே நல்லவர்களாகவே தெரிகிறார்கள். ஆகவே, இதை சுமுகமாக கையாள இரூதரப்பினருமே ஆயத்தமாகி, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு ஆரோக்கியமாக வழிநடத்திச் செல்ல வேண்டும்.

--------------------------------------------------------    

Thursday, August 20, 2026

74.மன அழுத்தம் இல்லாமல் வாழ புதிய வழி !!

 

 

மன அழுத்தம் இல்லாமல் வாழ புதிய வழி !!


                முன்னாள் ..எஸ் அதிகாரி திரு.இறையன்பு அவர்கள் ஒரு புத்தகத்தில், ‘மனம் எங்கே இருக்கிறது? என்கிற பிரச்சினை ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, மனமே ஒரு பிரச்சினையாக இருக்கிறதுஎன்று எழுதியிருப்பார். ’மனம்என்பது மிகவும் கடினமான புதிராக விளங்குகிறது. இந்த மனதை சைக்கியார்டிஸ்ட், சைக்கலாஜிஸ்ட், மெண்டலிஸ்ட் என பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஜோதிடர் மற்றும் மந்திரவாதிகளுமே நம் மனதை மையமாக வைத்துதான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பேர், எத்தனையோ விதமாக தேடிய போதும், அதைப்பற்றி எவ்விதமான ஒரு தெளிவோ அல்லது புரிதலோ இதுவரை விஞ்ஞானப்பூர்வமாக இல்லை. ஆன்மீக ரீதியிலும் சற்று குழப்பமாகவே இருந்து வருகிறது. ஒரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால், வளர்ந்த நாடுகளில் உடல் ரீதியிலான பிரச்சினை மிகக் குறைவாகவும்,மனரீதியிலான பிரச்சினைகள் அதிகமாகவும் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. ஆனால், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளைவிட நம் இந்தியாவில் மன ரீதியிலான பிரச்சினைகள் மிகவும் குறைவாக இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் மிகவும் குறைவாக இருப்பது ஜப்பான் நாட்டில்தான்.  அவர்கள் மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் நல்ல நிலையிலேயே வாழுகின்றனர். இதற்குக் காரணம் அவர்களின்  மரபு வழி என்றே நான் கருதுகிறேன். இந்தியாவில் நாம் இன்னமும் தாக்குப்பிடித்துக்கொண்டிருப்பதற்கு காரணம் நமது குடும்ப அமைப்பு, கூட்டுக்குடும்ப அமைப்பு போன்றவை என்றே நான் எண்ணுகிறேன். இன்றைய இளைய தலைமுறைக்கு மன அழுத்தம் வருகிறதென்றால் அவர்கள் 6 ஆம் வகுப்பு படிக்கத்தொடங்கும்போதே கல்வி சம்பந்தமாக ஆரம்பிக்கிறது என நினைக்கிறேன். காரணம் அந்தப்பருவத்திலேயே எந்நேரமும் ‘போட்டி, போட்டி, போட்டி’ என தயார் செய்யப்படுகிறார்கள். வீடு, பள்ளி, ட்யூஷன் வகுப்பு என அனைத்து இடங்களிலும் எந்நேரமும் இதே நிலைதான். ஆகவே அவர்கள் இயல்பாகவே மன அழுத்தத்திற்கு ஆட்படுகிறார்கள். மன அழுத்தமானது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆகவே ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கியப்பிரச்சினை வந்து விடுகிறது. அடுத்ததாக ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு. உதாரணமாக அதிக நேரம் வெயிலில் அலைந்துவிட்டு குளிர்பானம் குடிக்கலாம் என ஆசைப்படுகிறோம். வெயிலில் அலைந்ததற்கும் குளிர்பானம் குடிப்பதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? குளிர்ச்சி என்கிற சுகத்தைவிட நம் வயிற்றுக்குள் சென்றதும் குளிர்பானம் எதிர்மறையாகத்தான் வேலை செய்கிறது. மோர் குடித்தால் நல்லதுதான். ஆனால், நாம் குளிர்ச்சியாகத்தான் குடிக்கிறோம். அதுபோல சற்றுநேரம் ஃபோனைப்பார்த்தால் சரியாகிவிடுமோ? என்கிற கோணத்தில் ஃபோனைப்பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதுவே ஒருவித தாக்கத்தைத்தருகிறது. வாகனத்தை ஓரிட்த்தில் ஸ்டாண்டு போட்டு நிறுத்திவைத்துவிட்டு, அதன் இஞ்ஜினை இயக்கினால் சப்தம் அதிகமாக வரும். அதன் அனைத்து பாகங்களும் அதிரும். அதுபோலத்தான் உடலும். அதுபோல் உடல்ரீதியான இயக்கமில்லாமல் இருக்கும் போது, ஆரோக்கியக் குறைபாடு ஏற்படுகிறது. எப்போதும் படிப்பின் மீது அதீத அக்கறை காட்டும் போது உடலில் மாறுபாடான எதிர்மறை செயல்பாடுகள் ஏற்படுகின்றன. இந்தியாவில்1970 களில் எஸ்.எஸ்.எல்.சி இறுதித்தேர்விற்கான முடிவைத்தவிர மாணவர்களுக்கு வேறு ஏதும் பெரிதான மன அழுத்தம் தந்ததில்லை. அதஈக்கூட சற்று இலகுவாகவே கருதினார்கள். ஆனால், இன்றைய சூழல் அவ்வாறு இல்லை. தேர்வுகளிலேயே பல்வேறு வகைகளும் நிலைகளும் உள்ளன. அவற்றை எதிர்கொள்வதற்காக குறைந்தபட்சம் ஓராண்டிற்கு முன்பிருந்து தங்களை தயார்படுத்திக்கொள்கிறார்கள். அந்த காலகட்டத்தில் இரவு பகலும் அவர்களுக்கு மன உளைச்சல் அதிகம்தான். காரணம், அவர்களால் எவ்வளவுதான் தாங்க முடியும்? மேலும், கூட்டுக்குடும்பக்கலாச்சாரம் உடைந்து நியூக்ளியர் குடும்ப அமைப்பு வந்ததும் இதற்கு ஒரு காரணமாகும். ஒருவருக்கு சாப்பாடு எந்தளவிற்கு அவசியமோ அதேபோல் எமோஷனும் அவசியம். அந்த எமோஷனை செயற்கையாக உருவாக்க முடியாது. ஆக எமோஷன், அதீத கவனம், உணவுமுறை, வாழ்க்கையில் செட்டிலாக வேண்டுமென்கிற ரீதியிலான எண்ண ஓட்டம் ஆகிய அனைத்துமே மன அழுத்த்த்திற்கான காரணிகளே. இதை சரி செய்யக்கூடிய, சரி செய்ய வேண்டிய இரண்டு அம்சங்கள் எவை என்றா அரசு மற்றும் சமூகம். கடவுளைக் கண்டு வணங்கினால் கஷ்டம் தீருமென்பது ஆன்மீக ரீதியிலான நம்பிக்கை. ஆனால், அந்த கடவுளை தரிசிக்கும்போது கூட அமைதியாக, மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். ஆனால், இன்றைய சூழலில் மக்கள் அவ்வாறு இருக்க முடியவில்லை. அவர்கள் திருத்தலங்களில் முண்டியடித்துச் செல்கின்றனர் என்பதை நாம் கண்டு வருகிறோம். சரி.. இனிமேல் இதெல்லாம் மாறிவிடுமா? அல்லது குறைந்து விடுமா? என்றால் அதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். ஆக ஒட்டுமொத்த சமூகத்திற்கே மன அழுத்தம் இருக்கிறது. அந்த சமூகத்தில் ஒருசில தனி நபர்களுக்கு பாதிப்பு சற்று கூடுதலாக இருக்கிறது. இதனைப் புரிந்து சமாளித்துக்கொள்ளும் திறன் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் தப்பித்துவிடுகின்றனர். அவ்வாறு சமாளிக்க முடியாதவர்கள் செயலற்றுப்போகின்றனர். அந்த நிலைக்கு ஆளானவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை யோசிக்க வேண்டும். ஒரு குழந்தை தன்னால் படிக்க முடியவில்லை என்று கூறுகிறது என்றால், அதற்கு ‘உன்னால் படிக்க முடியவில்லை என்றால் நீ இப்படித்தான் ஆவாய்’ என்றால் எல்லாம் சரியாகிவிடுமா? அப்படிப்பட்ட குழந்தைக்கு என்னவகையான எமோஷனல் பின்னணி, மற்றும் இன்னபிற ஆதாரவிஷயங்களை வழிகாட்டப்போகிறோம்? இப்படி ஏதும் கிடைக்காத விரக்தியில் ஒருபக்கம் மதுவிற்கு அடிமையாகி விடுகின்றனர். அதுமட்டுமின்றி இன்னும் சில வேறுவேறு விஷயங்களுக்கு அடிமைப்பட்டுப் போய்விடுகின்றனர். இன்றைய சூழலில் படிப்பு என்பது மன அழுத்தம் தருகிறது என்றால், அடுத்ததாக வேலைவாய்ப்பு குறித்த மன அழுத்தம் வேறு வந்துசேருகிறது. காலத்தின் வேகமான ஓட்டத்தில், அதீதமான விஞ்ஞான வளர்ச்சியில் அடுத்த 10 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதையே கணிக்க முடியாத அளவிற்கு உலகம் பயணிக்கிறது. இப்போதே பிடித்தமான வேலை கிடைப்பதில்லை, அப்படியே கிடைத்தாலும் நீடித்து இருக்க முடியவில்லை. அப்படியே இருந்தாலும் சம்பள உயர்வு கிட்டுவதில்லை. இவை மட்டுமின்றி நிறுவனங்கள் திடீரென மூடப்படுவதால் ஒட்டுமொத்தமாக வாழ்வாதாரத்திற்கே பேராபத்து வந்து விடுகிறது. இவை எல்லாமே மன அழுத்தம் தரக்கூடியவையே. இந்த நிலையானது திருமணம் வரைக்கும் ஒரு விதமாகவும், திருமணத்திற்குப் பிறகு மேலும் பன்மடங்காகும். அதுவரைக்கும் ஒருவரை மட்டுமே பாதிக்க்க்கூடிய மன அழுத்தப்பிரச்சினையானது மனை, குழந்தை என குடும்பத்தையே பாதிக்கும்.’மன அழுத்தத்தை’ நீக்கும் வகையில் கல்வி சார்ந்த விஷயங்களை எப்படியெல்லாம் இலகுவாக்குவது? சிக்கல்களை எப்படி சரி செய்வது? வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது எப்படி? அந்த வேலைகளுக்கும் குறைந்தபட்சமான உத்திரவாதம் தருவது எப்படி? என்பனவெல்லாம் சிந்தித்து, பட்டியலிட்டு உதவும் அளவிற்கு அரசாங்கத்தின் ஸிஸ்டம் சரியில்லாமல் இருக்கிறது. ஆனால், Populist measure என்கிற விஷயத்தைக்கையிலெடுத்து ஆளுக்கு ரூ.5000/- என விநியோகம் செய்து விடுகிறார்கள். இந்த முறையானது வாக்கு வங்கிக்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால், ஒரு தனிமனித மன அழுத்தத்திற்கு ஒருபோதும் துணை செய்யாது. இன்று நிறைய இளைஞர்களின் தற்கொலைகளைப் பற்றி கேள்விப்படும்போது மனம் வலிக்கிறது. அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு தீராத் மனவலியும் வேதனையும் தருகிறது. அந்த இளைஞரின் ஆக்கப்பூர்வமான சிந்ந்தனைகள், செய்ல்திறன் ஆகிய எதையுமே இந்த சமூகம் காணும்முன்பே அவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். முன்பெல்லாம் கூட்டு குடும்பமாக இருந்தபோது தற்கொலைகள் இவ்வளவு சர்வசாதாரணமாக நிகழ்ந்ததில்லை. இன்று நியூக்ளியர் குடும்பம் என்றானபின் தற்கொலை விகிதம் அதிகரித்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால், மீண்டும் கூட்டுக்குடும்ப கலாச்சாரம் வருமா? அதற்குள் எப்படி நுழைவது என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி. காரணம், அவ்வாறு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஒரே இட்த்தில் வசிப்பதற்குரிய வீடுகள் இருக்கின்றனவா? இல்லையே! மேலும் இன்றை பணிச்சூழலில் ஒரே ஊருக்குள் பணி செய்யும் வாய்ப்புகளும் இல்லை. ஆளுக்கொரு பக்கமாய் பணிக்குச் செல்லும் சூழல் நிரந்தரமாகிவிட்டது. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த காலத்தில் அவர்களில் யாராவது ஒரு தொய்வு நிலையிலோ, அல்லது திறமையின்றி இருந்தாலோ அது வெளியே தெரியாவண்ணம் சமாளித்து, அரவணைத்து, அவரையும் அவர் சார்ந்தவர்களையும் சரிநிகராகவே நடத்துவர். கிராமங்களில் 15 வயது நண்பர்கள் வட்டம்  சேர்ந்து விளையாடுவர். அவர்களில் ஒருவருக்கு 7 வயதில் ஒரு தம்பி இருப்பான். அவனை ஒதுக்கி உட்காரவைத்துவிட்டு தாங்கள் மட்டும் விளையாடினால் அந்த தம்பிக்கு மனம் வலிக்குமே என அவனை விளையாட்டில் சேர்த்துக்கொள்வர். அவனுக்கு அப்போதைய பெயர்தான் கைப்புள்ள. அந்த கைப்புள்ள ஆட்டத்தில் எந்த தவறு செய்தாலும் அது கணக்கில் வராது. ஆனால், தன்னையும் அவர்கள் சரிசம்மாக நடத்துவதாகவே அந்த கைப்புள்ள கருதிக்கொள்வான். அதுபோல் தான் கூட்டுக்குடும்பக் கலாச்சாரமும். இன்றைக்கோ, நாளைக்கோ இன்னும் நூறு ஆண்டுகள் கழிந்தபின்னரோ மனித இனத்தின் எமோஷனுக்கும் சுபிட்சத்திற்கும் கூட்டுக்குடும்பக் கலாச்சாரமே தேவை. அது இல்லாமல் நாம் எத்தனை ஆயிரம் கோடி சம்பாதித்தாலும் மனமகிழ்ச்சிக்கு நான் கூறிய அரவணைப்புகளே. வளர்ந்த நாடுகளில் ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்கிறோம். நாம் அமெரிக்கா போன்ற நிலையையே அடந்து விட்டாலும் கூட மனமகிழ்ச்சி இல்லாவிட்டால் நாம் செய்ய முடியும்?

-------------------------------------------------------------

73.The REAL Story Behind Baba Harbhajan Singh's Mysterious Life

 

 

The REAL Story Behind

Baba Harbhajan Singh's Mysterious Life


 

            நாதுல்லா பாஸ் (Nathula pass) – அந்த இடத்தில் ஒரு ஐயனார். நாதுல்லா பாஸுக்கும் ஐயனாருக்கும் என்ன சம்பந்தம்? அனைத்து பெரியக்கோயில்களிலும் ஐயனார், கருப்பசாமி ஆகிய தெய்வங்களை நாம் காவல் தெய்வமாக வைத்திருக்கிறோம். இப்போது விஷயத்திற்கு வருவோம். ’’பாபா ஹர்பஜன் சிங்’ என்பவருடைய கதை மிகவும் ருசிகரமானது! இவருக்காக நிர்மாணிக்கப்பட்ட கோயில் சிக்கிம் மாநிலத்தில் சீனதேசத்தின் எல்லையில் ‘நாதுல்லா பாஸ்’ என்கிற இடத்தில் அமைந்திருக்கிறது. ’இது பழைய பட்டுப்பாதை’ என்றழைக்கப்படுகிறது. இந்தப்பாதையானது சீனாவிலிருந்து அரேபியா வரை செல்லக்கூடிய வழியாகும். இதன் மிகமுக்கியமான ஒரு சந்திப்பில்தான் நாதுல்லா பாஸ் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 14,000 அடி உயரத்தில் இருக்கும் இவ்விடத்தில் கோடைகாலத்தில் இயங்கும் ஒரு பெரிய சந்தை இங்கே இருக்கிறது. உலகிலேயே மிக அதிகமான உயரத்தில் இயங்கும் சந்தையும் இதுவே! சரி.. பாபா ஹர்பஜன் சிங் அவர்களை ஐயனார் என்றும், காவல் தெய்வம் என்றும் ஏன் சொல்கிறோம் என்றால், சீன-இந்திய எல்லையில் காவல் காப்பவராக இந்திய இராணுவத்தால் அங்கீகரித்துள்ளது. இவர் 1968 –இல் இந்திய இராணுவத்தின் ரோந்துப்பணியின்போது எதிர்பாராத விதமாக திடீரென எப்படியோ மறைந்து விடுகிறார். அதன்பிறகு எவ்வளவு தேடியும் அவர் உடல் கூட கிடைக்கவேயில்லை. ஆகவே ராணுவ விதிகளின்படி அவர் இறந்துவிட்டதாக, இராணுவம் அறிவித்தது. அவருடைய சேவைக்காக அவருக்குரிய ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்தும் உரியமுறையில் வழங்கப்பட்டு வருகிறது. அவரது மரணத்திற்குப்பின்னால், அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இராணுவ வீர்ர்களின் கனவில் தோன்றி, அவ்வப்போது எல்லையில் நமக்குச் சொந்தமான பகுதிகளில் எதிரிகளின் நடமாட்டத்தைக்குறித்து கூறிவருவது வழக்கமாக இருந்துவந்தது. அந்தத் தகவல்களின் அடிப்படையில் , அந்த இடத்தை உடனே நேரில் சென்று ஆய்வு செய்தால் அது உண்மையான தகவல்கள்தான் எனத் தெரிய வருகிறது. எங்கெல்லாம் இது போன்ற நிகழ்வுகள் நடந்தாலும், இராணுவ வீர்ர்களின் கனவில் தோன்றி துப்பு கொடுப்பது வழக்கமானது. இத் அறிவியலுக்கு அப்பார்ப்பட்ட வீஷயமாக இருந்தாலும் இந்திய இராணுவ வீரர்களுக்கு ‘ஹர்பஜன் சிங்’ மீது மதீப்பும், மரியாதையும் கூடியது. இதனால் அவருக்கு ஒரு கோயில் எழுப்பப்படுகிறது. இதில் மிக ஆச்சரியப் படத்தக்க  விஷயம் என்னவென்றால், சீன இராணுவ வீர்ர்களும் கூட அவரைப் பிரமிக்கிறார்கள் என்பதுதான்! அவர்களும் வந்துபோகிறார்கள்!

நமது இந்திய இராணுவம் ஹர்பஜன் சிங் அவர்கள் பயன்படுத்திய உடைகள், தலைப்பாகை, செருப்பு, நாற்காலி முதலியனவற்றை ஒரு மகான் அல்லது பெரும் சுவாமிஜிகளுடையவர்றை எப்படி மதிப்போடும், பக்தியோடும் வைத்துப்போற்றுவோமோ அப்படி வைத்திருக்கிறார்கள்! அவர் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு வருடமும் தன் சொந்த மாநிலமான பஞ்சாபில் உள்ள ஜலந்தருக்குச் செல்வதூ வழக்கம். அந்த வழக்கப்படியே அவர் மறைவிற்குப்பின்னும் ஒரு குறிப்பிட்ட நாளில் இரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. இது இன்றும் தொடர்கிறதூ. இன்றைக்கு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைப்பங்கீடு குறித்து பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பூசல்கள் நிலவுகின்றன. இந்த எல்லைப்பகுதியில் இன்றைக்கு வரைக்கும் எதிரிகளின் ஊடுருவல்கள் குறித்து தகவல் அளிப்பதில் முனைப்போடு இருப்பதால், பாபா ஹர்பஜன்சிங்  இந்திய இராணுவத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக போற்றப்படுகிறார். இப்படி தன் மறைவிற்குப் பின்னரும் எல்லையைக் காக்கும் நம் தமிழக பக்தி நெறியின்படி ‘நாதுல்லா பாஸ் ஐயனார்’ என பாசத்துடன் அழைக்கிறோம். அவரைப்போல் எத்தனையோவீர்ர்களும், தீரர்களும் நம் நாட்டின் எல்லையைப் பாதுகாத்து வருவதால்தான் நாம் கெளரமாகவும், பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறோம்.

’பாபா ஹர்பஜன் சிங் புகழ் ஓங்குக’.   

 

--------------------------

72.Is Bigg Boss REALLY Worth Your Time?

 

                      Is Bigg Boss REALLY Worth Your Time?


            தமிழ்நாட்டில் மக்கள் மனங்களில் இடம்பிடித்து மாநிலத்தையே உலுக்கக்கூடிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் ‘(Big Boss)’ நிகழ்ச்சியும் ஒன்றாகும். அந்த நிகழ்ச்சி என்றாலே எல்லோருடைய இல்லங்களும் ஒரே மாதிரி கொண்டாடுவது பிக்பாஸ் நிகழ்ச்சியாகும். இது சமுதாயத்தில் பிரபலமானவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? என அறிந்து கொள்ள விரும்பும் மனிதர்களின் அடிப்படையான எண்ண ஓட்டம் சார்ந்தது. இதற்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பயன்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலமானவர்களையும் ஓரிட்த்தில் இணைக்கிறார்கள். வயதானவர்கள் இருவர், இளமையான நான்கு பெண்கள் மற்றும் நான்கு வாலிபர்கள், நகைச்சுவை கமழும் ஒருவர், வில்லன் போல பரிணமிக்கக்கூடிய ஒரு நபர், இதுபோல் திரைத்துறையில் பிரபலமான, அல்லது பிரபலமானவர்களாகக் கருதப்பட வேண்டியவர்களை ஒருங்கிணைத்து, அவர்களைப் பேசவைக்கும்போது, விளையாட வைக்கும்போது, அவர்களின் அந்தரங்க விஷயங்கள் வெளிவருவதை தனி மனித ரசனையாக்குகிறார்கள். முன்னொரு காலத்தில் மன்னர்களின் அரண்மனைக்குள் நடக்கும் சில விஷயங்கள் வெளியுலகிற்குத்தெரிந்துவிட்டால், அதற்குக் காரணமானவர்களின் தலையைச் சீவி விடுவார்கள். எழுத்தாளர் கல்கியின் படைப்பிலும் இது காணக்கிடைக்கும். மதுரை பாண்டிய அரசர்களின் அரண்மனையில் கூன், குருடு போன்ற மாற்றுத்திறனாளிகளைத்தான் பணியாளர்களாக நியமித்திருப்பர். ’அரசரிடம் செலவழிக்க பணமா இல்லை? ஏன் இப்படிப்பட்ட நபர்களை பணியாட்களாக நியமித்திருக்கிறார்கள்?’ என்று எண்ணினால், அதற்கான பதில் என்னவென்றால், அப்படிப்பட்ட நபர்கள்தான் அரண்மனைக்குள் நடைபெறும் விஷயங்களை வெளியே செய்திகளாக கசியவிட மாட்டார்கள் என்கிற கருத்தியல்தான் அதன் அடிப்படை. இப்படிப்பட்ட கருத்தியலை அடிப்படையாகக்கொண்டு பொருளீட்டும் வணிகமே ‘பிக்பாஸ்’ ஆகும். 

            ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் கரு நெதர்லாந்து நாட்டினுடையது ஆகும். அங்கு இதன் பெயர் ‘பிக் பிரதர் (Big Brother)’. உலகம் முழுக்க உள்ள தனிமனித அந்தரங்கம், கலாச்சாரம் ஆகியவற்றை வெளிகொணர்ந்து, அதை மிகப்பெரிய அளவில் வணிகமாக்கி பொருளீட்டுவதே முக்கிய நோக்கம். இது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்போருக்குத் தெரியுமா>? என்றால், நிச்சயம் தெரியும். அவர்கள் பிரபலமாகவும், அதன் மூலம் வருமானம் ஈட்டவும் ஆசைப்படுகிறார்கள். சரி.. அவர்கள் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம் அவர்களின் அடையாளத்தை மேம்படுத்திக்கொள்ள முடியாதா? ’நம்மை எல்லோரும் கண்காணிக்கிறார்கள். ஆகவே ஏச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று இரூக்க முடியுமா? என்றால் அதுதான் இல்லை. வேலையில் சேருவதற்கான நேர்முகத்தேர்விற்குச் செல்லும்போது முழு விழிப்புணர்வுடன் (Conciuos) செல்வோம். அவ்வாறு சென்றவுடன்  ஆழ்மன உணர்வு (Sub consious) நிலைக்கு மாறிவிடுவோம். அங்கே கேட்கப்படும் கேள்விகளுக்கு மனதில் பட்டதை பதிலாக கூறிவிட்டு வந்துவிடுவோம். இதேபோல்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியும். அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் வெளியுலகத் தொடர்புகளை துண்டித்து விடுகிறார்கள். இதனால் தங்கள் உலகமே அந்த பிக்பாஸ் வீடு மட்டுமே என்கிற சிந்தனை வந்துவிடும். பொதுவாக காதல் மலர்வதற்கான காரணமே ஒரு ஆணும், பெண்ணும் இருக்கும் இடத்தில் தாங்கள் மட்டுமே இருப்பதாகக் கருதுவார்கள். திரைப்பட்த்திற்கான படப்பிடிப்பில் நாயகனும், நாயகியும் காதல் காட்சியில் நடிக்கும்போதோ, டூயட் பாடலில் நடிக்கும்போதோ அவர்களின் முகபாவனைகள் மட்டுமே அவ்வாறு தோன்றும். ஆனால், அங்கே உண்மைக்காதல் வருவதில்லை. அதற்கான நேரமும் இருப்பதில்லை. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி அப்படி அல்ல. நீண்ட கால அவகாசம் கிடைக்கிறது. ஆகவே, அங்கிருக்கும் நடிகர்கள் வெளியுலகையே மறந்து, அவர்கள் அப்போது வாழ்வதுதான் இயல்பானது என்று எண்ணத்தொடங்கி அதன்படியே நடக்கத்தொடங்கி விடுகிறார்கள். ’நாம் இப்படியெல்லாம் இருக்கீறோமா?’ என்று அவர்கள் கருதும் அளவிற்கு அவர்களுக்குபயனுள்ளதாக இருக்கலாம்.  ஆனால், அவர்களுக்கும் சில சேதாரங்கள் வருகின்றன. அவர்கள் ஒரூ பொய் சொன்னதூபோல் நடந்துகொண்டதாக அறிந்தால், அதன்பின் அவர்களை அவ்வாறுதான் பார்க்கத் தோன்றும். அவையெல்லாம் ரிஸ்க் எடுக்கும் வகையறாதான். ஆனால், அவர்கள் அதையும் கடந்துதான் வாழ்கிறார்கள். அதை நடத்துபவருக்கும் நல்ல வருமானம் வருகிறது. இந்த விளையாட்டை  விளையாட்டாக மட்டும் பார்க்காமல் ரொம்பவும் அதிகமாகவே உள்நுழைந்து செல்வதால், அவர்களுடைய பிரச்சினைகளை எல்லாம் மக்கள் தங்கள் பிரச்சினைகளாக எடுக்கத்தொடங்குகிறார்கள். இது சம்பந்தமான பாதிப்புகள் குறித்து உளவியல் நிபுணர்கள் பேசிய வீடியோக்களையூம் நாம் பார்க்க முடிகிறது. சரி... பிக்பாஸ் ஏன் பிரபலமானது? மக்களுக்குத் தெரியும் உள்ளுணர்வு அந்நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டிருப்பவர்களுக்கு ஏன் தெரியவில்லை?  அங்கே அவர்கள் ஏன் நேச்சுரலாக நடந்துகொள்கிறார்கள்? இதில் நேர்மறையான நீதி இருக்கிறதா? என்றால் பெரிதாக ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம். ஏதோ சிறு பொழுதுப்போக்கிற்காக பார்க்கலாம். இதற்காக தேர்விற்குப் படிக்கும் மாணவர்கள் உள்ளிட்டோர் தங்கள் நேரத்தை விரையமாக்கத் தேவையில்லை.

 

-----------------------------------------------------------

 

Tuesday, August 18, 2026

71.’முருகனைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டியது எவை?’ (முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -4)

 

முருகனைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டியது எவை?’

(முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -4)


 

முருகனும் விவசாயமும்:         

இந்திய மரபுவழி கலாச்சாரத்தின்படி முருகன் என்னும் கடவுள் சிவபெருமானின் மகனாக அறியப்படுகிறார். சிவன் வட இந்தியாவின் இமயமலைவாசியாக அறியப்படுவதால் அவருக்குப் பிறந்ததாக கூறப்படும் முருக கடவுள் தமிழ்த்தலைவன் என்பதில் சிக்கல் வந்துவிடும் என்று சீமான் போன்றோர் கருதுகின்றனர். முன்னாளில் என் பாட்டியிடம் நான் கேட்ட கதை ஒன்றைக் கூறுகிறேன். அந்தக்கதையில் முருகன் ஒரு மாபெரும் வீரன். தமிழ் மண்ணில் முதன்முதலில் விவசாயத்தைத் தொடங்கும்போது தமிழர்களுக்கு 3 சவால்கள் முன் நின்றன. முதலில் யானை, பாம்பு மற்றும் மயில் ஆகியவையே அந்த சவால்கள். யானை விவசாயப்பயிர்களுக்கிடையே புகுந்தால் எல்லாவற்றையும் நாசம் செய்துவிடும். காடுகளுக்குள் யானைகள் மரங்களை, பிற செடி,கொடிகளை ஒடித்துப்போட்டால் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லை. ஆனால், மனிதன் அரும்பாடுபட்டு உழைத்து விளைவிக்கும் விவசாயப்பயிர்களை நாசம் செய்துவிட்டால் அதன் சேதாரத்தை எப்படித் தாங்குவது? இதுகுறித்து சங்க இலக்கியப்பாடல் ஒன்று குறிப்பிட்டுள்ளது. அடுத்ததாக பாம்புகள். ஆசிய கண்டத்திலேயே அதிக அளவிலான பாம்புகள் வாழிடம் எதுவென்றால் அது நம் இந்தியாதான். பாம்பின் பெயராலேயே ஒரு மாநிலம் இருக்கிறது. அதுதான் நாகலாந்து! மகாபாரதக்காவியம் முழுமையுமே நாகங்களை மனிதர்கள் எதிர்கொண்டனர் என்பதுதான்! கர்ண மாவீரனின் நாகாஸ்திரம் கூட அதன் பின்னணியில் தான் அமைந்தது. ’உன் ஏரியாவா? அல்லது என் ஏரியாவா?’ என்கிற போட்டி மனிதர்களுக்கும் பாம்புகளுக்கும் இடையே நிலவியது. நம் தமிழ்க்கலாச்சாரத்தில் நாகத்தை ‘நல்லபாம்பு’ என்று அழைக்கிறோம். மேலும் அதனை நட்புடன் எதிர்கொள்கிறோம். அடுத்த்தாக மயில். பார்வைக்கு மயில் அழகுதான். ஆனால், அந்த மயில் நம் விவசாய விளைபொருட்களை எந்தளவிற்கு நாசம் செய்யும் என்பது விவசாயிகளுக்குத்தான் தெரியும். உதாரனத்திற்கு மக்காச்சோளம் பயிரிடப்பட்டு, நன்கு செழித்து வளர்ந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலத்திற்கு வரும் மயிலானது அந்த மக்காச்சோளத்தின் அடிபாகத்திலிருந்து மெல்ல மெல்ல தன் கால்களால் அழுத்திக்கொண்டே முன்னேறும். அந்த பயிர் வளைந்து கொடுக்கும் தன்மையுடன்  இருக்கும். ஆகையால் பயிரின் உச்சியில் விளைந்திருக்கும் சோளக்கதிர் தரையில் படும்வரை மயில் அழுத்திக்கொண்டே வரும். சோளக்கதிர் தரையைத் தொட்டவுடன்  அப்படி அழுத்திக்கொண்டே சோளத்தின் மேலுள்ள நார்ப்பட்டைகளுக்கு சேதம் செய்யாமலேயே அந்த சோளக்கதிர் மணிகளை மட்டும் ஒன்றுவிடாமல் கொத்தித்தின்றுவிடும். அதன் பின் தன் கால்களை நகர்த்தும். இப்போது அந்தப் பயிரானது பழையபடி மேலே நிமிர்ந்துவிடும். அதாவது மயில் சேதம் விளைவித்ததே யாருக்கும் தெரியாத வகையில் இருக்கும்! ஆக, விவசாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் இநத மூன்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிகுந்த திமை முருகனுக்கு இருந்தது. யானை வந்துவிட்டால் ஈட்டியை எறிவதைவிட ஒரு வேலை வீசுவது காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்கும். காரணம் வேலின் மேல்பகுதியின் கனமும் வடிவமைப்பும் அப்படி! அது இலக்கை நோக்கி துல்லியமாகப் பாய்ந்து யானையைச் சாய்த்துவிடும். இத்தகைய நுட்பத்தைக் கையாண்டது முருகனே என நம்பப்படுகிறது. இதனால் யானைகள் வேலைப்பார்த்தவுடன் தான் தப்பித்தால் போதுமென பின்வாங்கின. அதனால் யானைகள் கட்டுக்குள் வந்தன. அடுத்து பாம்பு மற்றும் மயில். இப்படி மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கு சவாலாக இருந்தவைகளைக் கட்டுப்படுத்தி தன்னுடனேயே வைத்துக்கொண்டவர் முருகன். இப்படியெல்லாம் நம்பிக்கையோடு காலங்காலமாக வணங்கப்பட்டுவரும் முருகன் வடக்கில்தான் பிறந்தார் என்பதை ஒத்துக்கொண்டால் நம் தமிழ் மரபின் மாண்புகள் சரியும்.

பாடல் மூலம் முருகஞானம்:

பின்னணிப்பாடகர் டி.எம்.செளந்தர்ராஜன் அவர்கள் பாடிய முருகன் பாடல், ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’.. என்று தொடங்கும். அதைக்கேட்டு எனக்கு சிறுவயதில் கோபம் கலந்த சந்தேகம் எழும். அதாவது, ’முருகனைப்பற்றி பாடும்போது அதென்ன ‘கற்பனை என்றாலும்’ என்று பாடுவது? காலம் செல்லச்செல்ல அறிவுசார் கேள்விகளுக்கு விடைகாண முயன்றபோது, அந்தப்பாடலை எழுதிய கவிஞர் வாலிக்கு உண்மையில் ’முருகன்’ என்பவன் கற்பனைதானோ? எனத் தோன்றியிருக்கலாம். அப்போது தன் குழப்பத்திற்கு விடைகாணூம் முயற்சியில் ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்..’ என்று தனக்குத்தானே ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்துவிட்டார் போலும்! என்று முடிவிற்கு வந்தேன். முருகனைப்பற்றிய சமீபத்தைய சர்ச்சைகளுக்கு நடுவில் என்னுடைய நிலைப்பாடும்கூட கவிஞர் வாலியைப்போன்றுதான். அதாவது முருகன் வடக்கில் பிறந்திருந்தாலும், தமிழ்மண்ணில் பிறந்திருந்தாலும் என் கடவுள் முருகன் என்பதில் மாற்றமில்லை. இதுவே அந்தப்பாடல் மூலம் நாம் பெறுகின்ற ஞானம்!  இவ்வளவிற்குப்பிறகும் முருகன் எங்கு பிறந்தார்? என்று கேட்பது ஒரு பிரச்சினையா? என்றால், இதற்கு என்ன சொல்வது? சரி.. ஐயப்ப சுவாமி விஷயத்திற்கு வருவோம். அவர் எங்கு பிறந்தார்? இன்றைய கேரளமாநிலத்தில் உள்ள ’பந்தளம்’ என்று கூறப்படுகிறது. ஐயப்பன் ‘தத்வமஸி’ எனும் மந்திரத்தை அடிப்படையாக்க் கொண்டுள்ளவர். அதன் பொருள் ‘நீயே கடவுள்’ என்பதாகும். ’இந்த ஐயப்பன் நம் இதிகாசங்களில் இடம் பெற்றிருக்கிறாரா?’ என்ற கேள்விக்கு ’ஆம்! இடம் பெற்றிருக்கிறார்’ என்பதே பதில்.

ஐயப்பனின் பிறப்பு:

ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் கிடைத்ததும் அதைப்பங்கிடும்போது விஷ்ணு மோகினியாக அவதாரமெடுக்கிறார். அவரை உண்மையில் பெண் தான் என்று நம்பிய தீய நோக்கம் கொண்ட அசுரர்கள் மோகினி வடிவத்தின் அழகில் மயங்கி தங்கள் நிலை மறந்தனர். ஆனால், தேவர்கள் அவ்வாறு மயங்கவில்லை. ஆகவே மோகினியாக வந்த விஷ்ணு தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தைப் பங்கிட்டுத்தந்துவிட்டு அங்கிருந்து வெளியேறிச்சென்று தன் சுயத்தோற்றதில் (விஷ்ணு) சிவனை சந்திக்கிறார். நடந்த சம்பவங்களை சிவனிடம் விளக்குகிறார். அப்போது ‘சரி.. அதென்ன? அப்படிப்பட்ட அழகிய மோகினியின் தோற்றம்?’ என்று கேட்க, உடனே விஷ்ணு மீண்டும் அந்த மோகினியின் தோற்றமெடுக்கிறார். அந்த மோகினியின் அழகில் சிவபெருமான் காமத்தால் சொக்கிப்போகிறார். இருவரும் புணரும் நிலை உண்டாகிறது. இந்த இடத்தில்தான் அறிவியலுக்கு முரண்பாடான நிலை. (அதாவது, ஒரு ஆணும், ஆணும் புணர்ந்தால் குழந்தை பிறக்குமா? என்பதே அது!) தன் காமத்தின் உச்சத்தில் சிவனின் விந்து கீழே சிந்தினால், வேறுவகையான பெரும் விபரீதங்கள் நிகழக்கூடும் என்பதால், அதை பார்வதிதேவி தன் கையில் ஏந்துகிறார். அதை குழந்தையாக உருவமெடுக்கச் செய்கின்றார். அந்தக்குழந்தையே ’மணிகண்டன்’. அந்தக்குழந்தை பம்பை நதி ஓடும் காட்டிற்குள் ஒரு மரத்தடியில் வைக்கப்படுகிறது. அதுநாள்வரை தன் ராஜ்ஜியத்தினை தனக்குப்பிறகு ஆள, குழந்தையின்றி தவித்துவந்த பந்தளத்து ராஜா  அந்தக்குழந்தையைக் கண்டு மனம் மகிழ்ந்து, தன் அரண்மனைக்கு கொண்டுசென்று சீரும் சிறப்புமாக வளர்க்கிறார். ஆக Mythology என்று அறியப்பட்டாலும், அது இன்றைக்கும் இருக்கக்கூடிய பந்தள அரண்மனையுடன் நேரடித் தொடர்பினைக் காட்டுகிறது. இதேபோல்தான் முருகனுக்கும். ஏன் நாம் மூருகன் தமிழ்க்கடவுள் என்று கூறுகிறோம் என்றால், ஹிந்தி மொழியை உருவாக்கியவர்கள் மனிதர்கள். அதில் ஏதும் சந்தேகமில்லை. சிவனின் ‘உடுக்கை’ எனும் இசைக்கருவி அதிர, அதிரப்பிறந்ததுதான் சமஸ்கிருத மொழி! இதனால்தான் அம்மொழிக்கு ’மஹேஸ்வர சூத்ரா’ என்று ஒரு பெயருண்டு. அதற்குன் இணையான உயர்ந்த இடத்தில் தமிழுக்க்காக முருகனை வைத்துவிட்டோம். பிறகெப்படி அந்தப்பெருமையை இமயமலைக்கு விட்டுக்கொடுத்துவிடுவோம்?

தமிழ்ச்சங்கத்தலைவன் முருகன்:

நம் தமிழ்மொழிக்கு இதுவரை நான்கு தமிழ்ச்சங்கங்கள் இருந்தன. நான்காம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ஐயா. பாண்டித்துரைத் தேவர். முதலாம் தமிழ்ச்சங்கத்தின் (தலைச்சங்கம்) தலைவர் இறைவன் சிவபெருமான். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முருகன். மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின்  தலைவர் புலவர் நக்கீரர் ஆவார். எது எப்படியாயினும் தமிழும் முருகனும் பிரித்துப்பார்க்க இயலாத நிலையில் உள்ள உயர்ந்த இட்த்தில் வைத்துள்ளோம். இப்படியிருக்க தீடீரென் மூன்றாம் நபர்கள் வந்து ‘முருகன் எங்களுடையவர்’ என்று கூறினால் என்னவாகும்? எப்படி ஏற்றுக்கொள்வது? ஏழாம் அறிவு திரைப்படத்தில் நம் காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற ’போதிதருமர்’ பற்றி வெளியிட்டிருப்பர். அது வரலாற்று உண்மையும் கூட! அந்த போதிதருமரை சீன மக்கள் ஏன் கொன்றனர்?  எனக்கு கிடைக்கப்பெற்ற அறிவும் ஞானமும் என்றும் என்னுடனே தங்கி விட வேண்டும்’ என்கிற நோக்கமே அவர்களை அவ்வாறு செய்யத்தூண்டியது. அவர் மீது அந்நாட்டு மக்கள் வைத்திருந்த அதீத பக்தியின் உச்சம் அது. அதுபோல ஏறத்தாழ 5000 ஆண்டுகளாக தமிழ் நிலத்தின், மொழியின் தலைவர் முருகன். அதை எப்படி தாரைவார்த்துக்கொடுக்க முடியும்? தமிழ் அடையாளம் என்பது இந்திய அடையாளத்திலிருந்து சற்றே மாறுபட்டது. தமிழ்மதம் என்பது இந்து மதத்திலிருந்து சற்றே மாறுபட்டது. இந்த ஒரு நூல்பிடிப்பில்தான் திராவிட சித்தாந்தம் இருக்கிறது. ஆனால், இந்த வேறுபாட்டின் நுட்பங்களைப்புரிந்து கொள்ளாமல் ’கடவுளே இல்லை’ என்கிற கோட்பாட்டை தூக்கிப்பிடிப்பதால் திராவிடம் வீழ்ந்தது.  நம் மரபு இன்றும் உயிர்ப்போடு இருப்பதற்குக்காரணம் தமிழ்மரபிற்கென ஒரு தனித்துவம் இருப்பதால்தான். அனைத்தும் சேர்ந்து இந்தியாவிற்கென ஒரு அடையாளம் இருப்பதுபோல், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்றவ்ற்றிற்கும் உள்ளன. வடக்கே விநாயகருக்கு சித்தி, புத்தி என இரு மனைவியராக சொல்லப்படுபவது ஒருவகை அறிவுசார் குறியீடு ஆகும். அவருக்கு அருகில் இரு மனைவியராக பெண் உருவங்கள் இருப்பதுபோல் இங்கு உள்ளன. ஆனால், நாம் ’லெஷ்மி சரஸ்வதி’ என்று வைத்துள்ளோம். ஆனால், அவர்கள் மனைவியரல்ல  ஆகவே இந்துமதம் என்பது ஒரு  மிகப்பெரிய நம்பிக்கை. இது உணர்வு சம்பந்தப்பட்ட்து. இதைப்பர்றி ஆராயும் போது அவர்கள் எவ்வளவு பெரிய பேரறிஞர்களாக இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையோடு அணுக வேண்டும்.  முருகனைப்பற்றிய தெலுங்குப்பட இயக்குனர் தனது ஆய்வினை தெளிவாகச் செய்யவேண்டும் என முடிவு செய்திருந்தால், முதலில் நம் தமிழ் மண்ணிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்திருந்தால் இங்கிருக்கும் மரபுகளை அவர் உணர்ந்திருப்பார். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல், “முருகன் வடக்கில் பிறந்தவர்” என்றால், அது தவறாகும்.

-------------------------------------------------

           

 

 

 

 

76.முதுகுளத்தூர் பிரச்சனையில் நடந்தது என்ன? நாடாளுமன்றத்தில் தேவரின் பேச்சு!

  முதுகுளத்தூர் பிரச்சனையில் நடந்தது என்ன ? நாடாளுமன்றத்தில் தேவரின் பேச்சு!              பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ப...