Wednesday, September 2, 2026

93.கிருஷ்ண தரிசனம் -10 (பகவத்கீதை)

 

கிருஷ்ண தரிசனம் -10 (பகவத்கீதை)

 

          அத்தியாயம் 2- இல் ஸ்லோகம் 56-இல்யருடைய மனம் துக்கத்தில் துவளுவதில்லையோ, சுகத்தை நாடுவதில்லையோ, பர்று, பயம், கோபம் ஆகியவற்றை விட்டவன் யாரோ அவனே புத்தி விழிப்புற்ற முனிவன் என அழைக்கப்படுகிறான்.” என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.

எண்ணற்ற மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. நிறைய உரைகள் இருக்கின்றன. நாம் தமிழில் மிக எளிய உரையை அப்படியே எடுத்துக்கொண்டு கலந்துரையாடுகிறோம். அதை ஆக்கியவர்களுக்கே இதன் பெருமையையும் தந்து விடுகிறேன்.

          இதில் மூன்று விஷயங்களைக்கூறுகிறார். முதலில் தன்னிலே திருப்தி கொள்வது, ”இப்போது துக்கத்தில் துவளுவதில்லையோ, சுகத்தில் நாட்டம் கொள்வதில்லையோ, பற்று, பயம், கோபம் கொள்வதில்லையோ..” என்கிறார். இவையெல்லாம் cause (காரணம்) என்பதில் அடங்கும்.  

 Cause என்றால் என்ன?

நமக்குள் அதிருப்தி மனப்பான்மையை உண்டாக்கும் காரணி.

அதிருப்தி உண்டாக்கக்கூடியவை என்னென்ன?

துக்க, கோபம், பயம் ஆகியவை வருகின்றன. இவையெல்லாம் மனதை கொந்தளிக்கச் செய்யக்கூடியவை ஆகும்.

யாருக்கு துக்கமில்லை?

துக்கத்தினுள் மூழ்காதவனுக்கு!

பயம், கோபம், ஆசை ஆகியவற்றில் அதற்கான வாய்ப்பில்லை. சுகத்தில் நாட்டம் கொள்வதில்லை.

சிலர்எனக்கு துக்கத்தில் துவளுவது அறவே பிடிக்காது. சுகத்தில் நாட்டம் கொள்வது பிடித்தமான விஷயம்.” என சொல்வதுண்டு. இது ஒரு package (தொகுப்பு) போல் உள்ளது. இது இருந்தால் அது இருக்க முடியாது. சுகத்தில் நாட்டமிருந்தால் துக்கத்தில் துவளவேண்டிய கட்டாயம் வரும். இதை பயிற்சி செய்யும்போதுதான் இதன் பொருள் நமக்கு புரியத்தொடங்கலாம். ஆதனால்தான் நம் மதக்கோட்பாடுகளில்விரதம்மேற்கொள்கிறோம். விரதத்திற்காக நாம் உணவை தியாகம் செய்கிறோம். நமக்கு பசி எடுக்கிறது. நம் சுகத்தை தள்ளி வைக்கிறோம். அப்படிப்பட்ட சுகத்தை தள்ளிவைப்பதால் (விரதம் மேற்கொள்வது) ஒருவேளை நாளை பட்டினி என்கிற துக்கநிலை வந்துவிட்டால் அதை எளிதாக எதிர்கொள்ளும் தைரியம் இயல்பாகவே வந்துவிடுகிறது. சுகத்தை நாமாக தள்ளிவைப்பதால், துக்கத்தை எளிதாக எதிர்கொள்ளும் ஆற்றலும் பக்குவமும் கிடைத்துவிடுகிறது. சுகத்தை விரும்பி ஏற்றால் துக்கமும் தானாகவே நம்மைத்தேடி வந்துவிடுகிறது. ஆக, இம்மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை. இந்நிலையே புத்தி நிலைபெற்ற நிலையாகும். இப்படிப்பட்ட நபரையேமுனிவர்என்கிறோம்.

இப்படிப்பட்டவர்களைக் குறிக்க சித்தர்கள், சாதுக்கள், சாமியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், அவதாரங்கள், கடவுள்  என பல வார்த்தைகள் உண்டு.  இவர்களுக்குள் விகிதாச்சார வேறுபாடு இருக்கின்றனவா? என்று கேட்டால்ஆம். இருக்கின்றதுஎன்றே எண்ண வேண்டியுள்ளது. இது குறித்து நாம் தொடர்ந்துபேசுவோம்.

-------------------------------

92.கிருஷ்ண தரிசனம் – 9 (பகவத்கீதை)

 

கிருஷ்ண தரிசனம் – 9 (பகவத்கீதை)

மனம் ஒருமுகப்பட்ட ஒருவனின் அடையாளம் என்ன?

புத்தி விழிப்புற்ற நிலையில் அவன் எப்படி பேசுவான்?

எப்படி இருப்பான்? எப்படி நடந்து கொள்வான்?

புத்தியோகம் வாய்க்கப்பெற்றவனை எப்படி அடையாளம் காண்பது?

அர்ஜுனரின் இந்த கேள்விகளுக்கு கிருஷ்ண பரமாத்மா பல இடங்களில் பதிலுரைக்கிறார்.

முதலில் அவர் சொல்வது, “தன்னில் திருப்தி கொண்டவன்என்னும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.

எப்போது ஒருவன் தன்னாலே, தன்னில் திருப்தி கொண்டு அதன்மூலம் தன் மனதின் எல்லா ஆசைகளையும் விட்டொழிக்கிறானோ அப்போது அவன் புத்தியோகி என கருதப்படுகிறான்.”

அர்ஜுனரின் கேள்விக்கு புத்தியோகத்திற்குப்பிறகு கிருஷ்ண பரமாத்மா கூறிய முதல் பதில் இதுதான்.

இதில் முக்கியமான வார்த்தையானதன்னாலே, தன்னில் திருப்தி கொண்டுஎன்பதற்கு என்ன அர்த்தமெனில் உலகத்தில் ஒருவனுக்கு அவனைச்சுற்றி என்ன நடந்தாலும் அவன் மேலேயே அவனுக்கு கிடைக்கும் திருப்தியாகும்.

பூங்காக்களில் காலை 11 மணிக்கே சிலபேர் அவர்களைச் சுற்றி என்ன நடந்தாலும், என்ன சத்தம் கேட்டாலும் பூங்காவில் இருக்கும் பெஞ்சின் மேல் கைகளால் தலைக்கு முட்டுகொடுத்து, கால் மேல் கால் போட்டுக்கொண்டு படுத்தபடி தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருப்பான். இப்படி இருப்பவன் கிருஷ்ண பரமாத்மா சொல்லும் புத்தியோகத்தின் அடிப்படையிலா செய்கிறான்?

அப்படிப்பட்டவனுக்கு படிப்பதற்கு பகவத்கீதை தேவையே இல்லை. அவனுக்கு ஒரு குவாட்டர் மதுபானமே போதுமானது!

தன்னிலே திருப்தி கொள்வது என்பது உயர்ந்த நிலையிலான ஒருவகை திருப்தி. இதனை சுயநலமான நோக்கத்துடன் ஒப்பிடக் கூடாது. அதாவது சுயநலமாக இருப்பவர்கள் இந்த உலகத்தில் எது எப்படி நடக்கிறதோ இல்லையோஎனக்கு, என்னுடைய தேவைகள் பூர்த்தியாக வேண்டும். எனக்கு என் சாப்பாடு! எனக்கு என் இடம்! எவன் வாழ்ந்தால் என்ன? எவன் செத்தால் என்ன?” என்று வாழ்வது ஒரு வகையான motive (நோக்கம்). Motive என்பது நமக்கு ஆக வேண்டிய காரியங்களை எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது!

தன்னில் திருப்தி என்பது orientation(நோக்குநிலை). எது நடநதாலும் ஏற்றுக்கொள்வது. அதிருப்தி கொள்ளாமலிருப்பது. அதிருப்தி கொள்ளவில்லை என்றால் திருப்தியாகிவிட்ட்து என்று பொருள்.

இந்த திருப்தி; அதிருப்தி எல்லாம் புறச்சூழல்களில் இருந்து விடுபட்டு, உள்புறமாக நடப்பது.”எதையும் தாங்கும் இதயம்என அறிஞர் கூறினாரே.. அந்த வகையான திருப்தி அதுதான்!

சரி. ஓகே. நானும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் எதையும் தாங்கும் இதயத்துடன் வந்துவிட்டேன்!” என்று கூறமுடியுமா என்றால் கூறவே முடியாது.

மனதின் சிந்தனைகளை, கோஷத்தை, நோக்குநிலை ஆகிய அனைத்தையும் அவரவர் செயல்பாடுகளிலிருந்து, எண்ணங்களிலிருந்து  அணுவணுவாகத்தான் மாற்ற வேண்டியுள்ளது. இப்படி மெல்ல மெல்ல மாற்றித்தான் உயர்நிலைக்குப் போக வேண்டியுள்ளது.

பீஷ்மரைப் பார்.. துரோணரைப்பார்..அவர்களெல்லாம் இப்படித் தான் இருக்கிறார்கள்  என கிருஷ்ண பரமாத்மா யாரையும் அடையாளப்படுத்தவில்லை. அவர் வெறும் பண்புநலன்களை மட்டும்தான் சுருக்கமாக கோடிட்டுக் காட்டுகிறார்.

------------------------------

93.கிருஷ்ண தரிசனம் -10 (பகவத்கீதை)

  கிருஷ்ண தரிசனம் -10 ( பகவத்கீதை )             அத்தியாயம் 2- இல் ஸ்லோகம் 56- இல் ” யருடைய மனம் துக்கத்தில் துவளுவதில்லையோ , சுகத...