மக்கள் பணி செய்ய எம்எல்ஏ-வுக்கு கார்!
கொஞ்சம் எதார்த்தமா யோசிங்க ?
தமிழக முதல்வர் திரு.விஜய் அவர்கள் சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணி செய்வதற்காக அனைவருக்கும்
’கார்’ தரப்போவதாக தனது அபிப்ராயத்தைத் தெரிவித்தார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் ‘எங்களுக்கு இன்னோவா கார்வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார். இதெல்லாம் இரண்டு விதமான விவாதத்தினை எழுப்பியது. பிரதிமாதம் 232 கார்கள் எனக் கணக்கிட்டு, ரூ.25,000/- த்தை காருக்காக ஒதுக்கீடு செய்தால், ஒரு ஆண்டுக்கு ரூ.
17.05 கோடி ஆகும். இதை ஐந்து ஆண்டுகளுக்கு பெருக்கிக்கொள்ள
வேண்டும். இதில் மந்திரிகளுக்கு தரப்படும் கார்களைக் கழித்துக்கொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருக்கு ரூ.35 கோடி. கார்களை வாங்கும் செலவு ஆகியவற்றைக் கூட்டி கணக்கிட்டுப்பார்த்தால் தோராயமாக ரூ.300 கோடி வரலாம். இவை ஐந்து ஆண்டுகளுக்கான செலவு என என்னுடைய அனுமானத்தைத் தெரிவிக்கிறேன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பழ.கருப்பையா அவர்கள், ’பலவிதமான செலவுகள் அரசை எதிர்நோக்கிக் காத்திருக்கையில்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு
கார் தரும் திட்டம் அவசியம்தானா? ஆகவே, கார் தேவையில்லை’ என்று தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். பொதுவாக அரசாங்க ஊழியர்களுக்கு கார்கள் எப்படி வழங்கப்படுகின்றன? எங்கெல்லாம் அதிகாரிகள் களப்பணியில் நேரிடையாக ஈடுபடுகின்றனரோ…மேலும் அதிகாரிகள் எந்த லெவலில் (மட்டத்தில்) இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் கார்கள் வழங்கப்படுகின்றன. தலைமைச்செயலகத்தில்
இணைச் செயலாளர் வரைக்கும்கூட கார்கள் இருப்பதில்லை. ஒரு சில இணைச் செயலாளர்களுக்குத்தான் கார் இருக்கும்.
பொதுவாக கார் என்பதை அதிகாரத்தின் சின்னமாக மக்கள் கருதுவதால் எல்லோருக்குமே அரசாங்கக் கார்மீது ஒருவித ஈர்ப்பும், ஆர்வமும் நிறைந்திருக்கிறது. இதற்கு நம் சட்டமன்ற உறுப்பினர்களும் விதிவிலக்கல்ல.
சட்டமன்ற உறுப்பினர்களின்
பணி என்ன? என்று பார்த்தால்,
Legistative, Excecutive, Judiciary என மூன்றுவிதமாக இயக்கங்களைப் பிரித்துக் கொள்கிறோம். சட்டமன்றக்கூட்டத்தில் கலந்துகொண்டு,
அங்கு சட்டங்களை இயற்றுவது மட்டும் அவர்களுடைய வேலை. பாராளுமன்றத்திலும் இதே போன்ற பணிகள்தான். அந்த இடத்துடன் அவர்களின் பணி முடிந்துவிடுகிறது. அவர்கள் தொகுதிக்கு செல்லத்தான் வேண்டுமா? களப்பணி ஆற்றத்தான் வேண்டுமா? என்றால், அரசின் நிகழ்ச்சிகள்,
விழா சம்பந்தமானவற்றில்
கலந்துகொள்வதைத்தவிர வேறெந்த பணிகளும் ஒதுக்கப்படவில்லை.
ஏன் இந்த இவு உண்டாக்கப்பட்டதென்றால் ஜனநாயகத்தின் ஆரம்பக் காலகட்டத்தில்,
அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து விடக்கூடாது என்பதற்காக அதை மூன்றாகப் பிரித்தனர். சட்டமன்ற விஷயங்களுக்குள் Excecutive
வந்துவிடக்கூடாது என்றும், Excecutive செயல்பாடுகளுக்குள்
Judiciary வந்துவிடக்கூடாது என்றும், இதேபோல் Judiciary செயல்பாடுகளுக்குள் வேறு யாரும்
வந்துவிடக்கூடாது என்றும் பிரித்து வகைபடுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு
களப்பணி என்பது கிடையாது. ஏற்கனவே இவர்கள் பணி செய்ய வேண்டுமென்பதால் தொகுதி மேம்பட்டிற்காக
ஒரு நிதியை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கி வந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்
அவ்வாறே இருந்தது. தங்கள் தொகுதி சம்பந்தமாக, அவர்களுக்குப் பிடித்தமான காரியங்களை
ஆற்றுவதகாக தாப்பட்டு வந்தது. (தற்போது அதை மத்திய அரசு நீக்கிவிட்டது.) அதுபோன்ற காரியங்களை
ஆய்வு செய்வதற்கு சென்றால் அவர்களுக்கு கார் தேவைப்பட்டது. ஆக, களப்பணிக்காக சட்டமன்ற
உறுப்பினர்களுக்கு கார் தர முடியாது. ஆனாலும், அவர்களின் அந்தஸ்து கருதி வேண்டுமானால்
தரலாம். மந்திரிகளை இந்தப்பட்டியலில் சேர்க்க முடியாது. காரணம், அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக
வந்தாலும், Excecutive என்னும் அந்தஸ்தைப் பெறுகிறார்கள். அவர்கள் அதிகாரத்திற்கான
பொறுப்பாளர்களாக மாறிவிடுகிறார்கள். அதனால், மந்திரிகளுக்கு கார் தரவேண்டியது புரோட்டாக்கால்
படி அவசியமாகிறது. இது ஒரு விதமான பார்வை.
ஒரு நியாயமான சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார்.
ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறார் என்றால், பொதுப்போக்குவரத்தான பேருந்தில் ஏறிச் செல்வதோ..
அல்லது வாடகைக் கார் எடுத்துக்கொண்டு செல்வதோ சற்று சிரமம்தான். ’மக்கள் சேவைக்குத்தானே
வந்துள்ளீர்கள். ஆகவே, சொந்தக்காசை செலவழிக்கலாமே? என்று கூறலாம். ஆனால், எத்தனைபேர்
அதை சரிவர செய்வார்கள் என்று தெரியாததால் ஒரு குறிப்பிட்ட அளவினை அரசாங்கம் தருவது
நல்ல விஷயம் தான். ஒரு நேர்மையான சட்டமன்ற உறுப்பினர் பள்ளி, கல்லூரி போன்ற பல நிகழ்ச்சிகளில்
கலந்துகொண்டு தன்னுடைய மேலான கருத்துகளை கூற வாய்ப்பிருக்கும். அரசாங்க ஊழியர்களுக்கு
பிரிட்டிஷாரின் காலத்திலிருந்தே ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களாக பணிசெய்தவர்களுக்கு
ஓய்வூதியம் வழங்கபட்டதில்லை. தமிழகத்தில் காமராஜர் அமைச்சரவையில் மந்திரியாகப் பணியாற்றிய
அமரர். கக்கன் அவர்களின் வாழ்நாள் இறுதிக்காலங்களில், தன் நோய்க்கு தனியார் மருத்துவமனைக்குச்
சென்று சிகிச்சை பெற வசதி இல்லாத காரணத்தால், மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அந்த மருத்துவமனையில் அப்போது வசதிகள் சரிவர
இல்லாத நிலையில், கீழே ஒரு பாய் விரித்து அவர் படுக்கவைக்கப்பட்டிருந்தார். அப்போது
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் கவனத்திற்கு கக்கன் அவர்களைக் குறித்த தகவல் கிட்டியது.
உடனே எம்.ஜி.ஆர் அந்த ஆஸ்பத்திரிக்குப் புறப்படுகிறார். அதன்படியே க்க்கன் அவர்களின்
நிலையை நேரில் கண்டு மனம் கலங்கினார். இந்த சம்பவத்தினால், சட்டமன்ற உறுப்பினர்களின்
எதிர்காலத்திற்கு வாழ்வாதாரம் இல்லாமல் போகக்கூடாது’என்று அவரால் கொண்டு வரப்பட்டதுதான்
சட்டமன்ற உறுப்பினர் ஒய்வூதியத்தொகை என்று கூறுவர். இந்த ஏற்பாடானது அவர்கள் பிற்கால
வாழ்க்கைக்கு நிச்சயம் பயனுள்ளதாகும். ஓய்வூதியம் உறுதியாக கிடைக்கும் என்கிற நம்பிக்கை
இருக்கும் என்பதால் அவர்களின் நேர்மை, நீதியைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்பதும் ஒரு
காரணமாக இருக்கலாம். ஆக, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கலாம். அதுவே இன்னோவா
தரலாமா? என்பது முதல்வரின் மனதைப் பொறுத்தே அமையும்.
-----------------------------------------------------------